முகப்பு செய்திகள் இலங்கைக்கு படையெடுக்கவுள்ள சீனர்கள்: எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ள அரசாங்கம்
செய்திகள்

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள சீனர்கள்: எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ள அரசாங்கம்

பகிரவும்
பகிரவும்

இலங்கையின் இயற்கைக்காட்சி மற்றும் கலாசாரத்தை அனுபவிக்க அதிகமான சீன சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என்று தாம் நம்புவதாக  பிரதி வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா துணை அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தாம், கிட்டத்தட்ட சீனா முழுவதும் பயணம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பன்முகத்தன்மை கொண்ட கலாசாரம், உணவு மற்றும் நட்பு என்பவற்றைக் கொண்ட அந்த நாட்டு மக்களால் ஈர்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டில், சீனாவில் படிக்க வேண்டும் என்ற தனது கனவின்கீழ், ரணசிங்க சீன அரசாங்க உதவித்தொகையை பெற்று, சுற்றுலா முகாமைத்துவத்தில் சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

தெற்கு மக்கள் மத்தியில் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தின் செயற்பாடு

இலங்கை – சீனா

முன்னதாக, 2017 ஆம் ஆண்டில், இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் இரண்டாவது பெரிய ஆதாரமாக சீனா மாறியிருந்தது.

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள சீனர்கள்: எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ள அரசாங்கம் | Sri Lanka Hopes For More Chinese Tourists

ஆண்டு முழுவதும் 260,000 க்கும் மேற்பட்டவர்கள் இலங்கைக்கு வந்தனர். ஏனினும் 2020இல் கோவிட் காரணமாக அதில் தொய்வு ஏற்பட்டது. இந்தநிலையில், இலங்கைக்கும் சீனாவுக்கும் நெருக்கமான பொருளாதார, இராஜதந்திர மற்றும் கலாசார பரிமாற்றங்கள் உள்ளன என்று ருவான் ரணசிங்க கூறியுள்ளார்.

உயர்தர பட்டுப்பாதை ஒத்துழைப்பு மற்றும் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய திட்டங்கள் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு முக்கியமான உத்வேகத்தை அளித்துள்ளன.

தென்னிலங்கையில் வீடொன்றின் மீது பல தடவைகள் துப்பாக்கி சூடு

வலுவான சந்திப்பு

மேலும் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு வலுவான சந்திப்பை வெளிப்படுத்தியுள்ளன என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள சீனர்கள்: எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ள அரசாங்கம் | Sri Lanka Hopes For More Chinese Tourists

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை சீனாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இதன்போது, இருதரப்பு உறவுகளை புதிய உச்சத்திற்கு ஊக்குவிப்பதற்காக வர்த்தகம் மற்றும் முதலீடு, முக்கிய திட்டங்களில் ஒத்துழைப்பு மற்றும் கலாசார மற்றும் சுற்றுலா பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல அம்சங்களில் இலங்கையும் சீனாவும் அதிக முடிவுகளை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ரணசிங்க கூறியுள்ளார். 

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...