முகப்பு இலங்கை மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு ராணுவ வீரர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கைசெய்திகள்

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு ராணுவ வீரர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பகிரவும்
பகிரவும்

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு ராணுவ வீரர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களில் ஒருவராக மாற்றுத் திறனாளியான முன்னாள் இராணுவ உறுப்பினரும் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கடந்த 16ஆம் தேதி காலை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகை தந்தவர்களை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த சம்பவம் மன்னார் நீதிமன்ற வளாகம் முன்பாகவே நடைபெற்றுள்ளது.

இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், ஒரு பெண் உட்பட மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழந்தவர்கள் மன்னார், உயிலங்குளம், நோச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான செல்வகுமார் சுதாகரன் எனவும், 61 வயதான சவரியன் அருள்தாஸ் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் நீதிமன்ற வளாகம் அருகில் இருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததுடன்  இருவரை கடுமையாக காயப்படுத்திய சம்பவத்தில் தொடர்புடைய நாரஹேன்பிட்ட இராணுவ மருத்துவமனையில் பணியாற்றும் இராணுவ வீரர் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்: பாடசாலைகளில் முறைப்பாடுகள் மூடமறைக்கப்படக்கூடாது – ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்தல்

வடக்கு மாகாண பாடசாலைகளில் குழந்தைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முறைப்பாடுகள் எழுகின்றன என்ற காரணத்தினால், அவை...

சீமெந்து விலை இன்று முதல் அதிகரிப்பு!

ஜூன் 8, 2025 – தமிழ்தீ இலங்கையில் இன்று (ஜூன் 8) முதல் 50 கிலோ...

சட்ட ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளதாக நமல் ராஜபக்ஷக் குற்றச்சாட்டு!

நாட்டில் சமீபத்தில் அதிகரித்த குற்றச்செயல்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள SLPP பாராளுமன்ற...

உக்ரைனின் கீவ் மீது ரஷ்யா தீவிரமான வான்வழி தாக்குதல்!

உலகத்தை உலுக்கியவாறு, ரஷ்யா கடந்த இரவிலிருந்து இன்று அதிகாலை வரை உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட...