முகப்பு இலங்கை மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு ராணுவ வீரர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கைசெய்திகள்

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு ராணுவ வீரர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பகிரவும்
பகிரவும்

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு ராணுவ வீரர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களில் ஒருவராக மாற்றுத் திறனாளியான முன்னாள் இராணுவ உறுப்பினரும் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கடந்த 16ஆம் தேதி காலை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகை தந்தவர்களை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த சம்பவம் மன்னார் நீதிமன்ற வளாகம் முன்பாகவே நடைபெற்றுள்ளது.

இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், ஒரு பெண் உட்பட மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழந்தவர்கள் மன்னார், உயிலங்குளம், நோச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான செல்வகுமார் சுதாகரன் எனவும், 61 வயதான சவரியன் அருள்தாஸ் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் நீதிமன்ற வளாகம் அருகில் இருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததுடன்  இருவரை கடுமையாக காயப்படுத்திய சம்பவத்தில் தொடர்புடைய நாரஹேன்பிட்ட இராணுவ மருத்துவமனையில் பணியாற்றும் இராணுவ வீரர் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...

வருட முடிவுக்குள் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும் – ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க அறிவிப்பு!

பண்டாரவள, அக்டோபர் 12:இந்த ஆண்டின் முடிவுக்கு முன் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும்...