இன்று நடைபெற உள்ள யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா அவர்களின் தலைமையில் இடம் பெற உள்ளது. குறித்த கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,வடக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர், மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இன்றைய கூட்டத்தில் யாழ்பாணத்தின் அபிவிருத்திக்கான பல்வேறுபட்ட முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதுடன் முக்கிய சில முடிவுகளும் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இணைப்பு 2
இன்றைய யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகை, வீதி அபிவிருத்திகள், காணி பிரச்சனைகள் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன.
கருத்தை பதிவிட