முகப்பு இலங்கை கைத்தொழில் வளர்ச்சிக்கு உறுதிமனையில்லா கடன் – புதிய அரசு திட்டம் அறிமுகம்!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

கைத்தொழில் வளர்ச்சிக்கு உறுதிமனையில்லா கடன் – புதிய அரசு திட்டம் அறிமுகம்!

பகிரவும்
பகிரவும்

இந்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் கைத்தொழிலாளர்களுக்கு (உற்பத்தியாளர்களுக்கு) உறுதிமனையில்லா கடன் (Collateral-Free Loan) வழங்கும் புதிய திட்டம் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், பெறப்படும் கடனை திருப்பி செலுத்த தொடங்குவதற்கான ஒரு குறிப்பிட்ட காலகட்டம் (Grace Period) சலுகையாக வழங்கப்படும் என்பதும் கூறப்படுகிறது.

நிதி மற்றும் திட்டமிடல் இணை அமைச்சர் டாக்டர் ஹர்ஷண சூரியப்பெரும சமீபத்தில் பாராளுமன்றத்தின் ஒழுங்குமுறை மற்றும் விதிகள் தொடர்பான குழுக்கூட்டத்தில் இதை உறுதிப்படுத்தினார்.

அவர் தெரிவித்ததாவது:
“நாட்டின் உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம், நாட்டிற்கு தேவையான வெளிநாட்டு செலாவணியை ஈட்டிக்கொள்ளலாம். இதன் மூலம் நாட்டின் கடன் சுமையை குறைக்கும் ஒரு வாய்ப்பு உருவாகும். இதனை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.”

இந்தக் குழுக்கூட்டம் தெற்காசிய விடுதலை வாணிப ஒப்பந்தம் (South Asian Free Trade Agreement) குறித்த விவாதத்திற்காக நடைபெற்றது.

அத்துடன், கைத்தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆதரவுகள், நிவாரண உதவிகள், மற்றும் வசதிகள் பற்றிய தெளிவான தகவல் வழங்கப்பட வேண்டும் என ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (Export Development Board) இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தியது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லஞ்ச ஊழல் வழக்கில் விளக்கமறியல் – யாழ் சிறைக்குப் மாற்றம்

ரூ.500,000 லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC),...

கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

சுவிட்சர்லாந்தில் ஆண்களே அதிக எடைகொண்டவர்கள்: புதிய ஆய்வு தகவல்!

சூரிச்: சுவிட்சர்லாந்தில் அதிக எடை கொண்டவர்கள் ஆண்களா, பெண்களா என்ற கேள்விக்கு, சமீபத்திய ஆய்வுகள் ஒரு...

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர்: திருமதி தனுஜா முருகேசன்!

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...