முகப்பு அரசியல் பிரதமர் ஹரினி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் – மாணவர்களுடன் நேரடி கலந்துரையாடல்!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

பிரதமர் ஹரினி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் – மாணவர்களுடன் நேரடி கலந்துரையாடல்!

பகிரவும்
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90
பகிரவும்

இன்று காலை, பிரதமர் ஹரினி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு சிறப்பு விஜயம் மேற்கொண்டார். கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் இந்த பயணத்தின் போது, அவர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நேரடியாகச் சந்தித்து அவர்களின் பார்வைகளை கேட்டறிந்தார்.

கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுடன் உரையாடிய பிரதமர், அவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு வசதிகளைப் பற்றிய கேள்விகளை முன்வைத்து, தேவையான உதவிகளை வழங்க அரசாங்கம் தொடர்ந்து செயல்படுவதாக உறுதியளித்தார்.

அதன் பின்னர், கல்லூரி அருங்காட்சியகத்தையும் மாணவர்களின் இணைப்பாட செயற்பாடுகளையும் பார்வையிட்ட பிரதமர், அங்கு ஒரு சிறப்பு உரையாற்றினார். கல்வியில் மாணவர்களின் ஆர்வத்தையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பேசிய அவர், நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப மாணவர்களின் பங்கு முக்கியமானது என தெரிவித்தார்.

இதையடுத்து, கல்லூரி அதிபர் பிரதமருக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கி கௌரவித்தார். நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்றைய தினம், யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பொதுமக்கள் சந்திப்புகளிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...