முகப்பு இலங்கை துப்பாக்கிச் சூட்டில் இரட்டைக் கொலை. மித்தெனிய, கடேவத்த பகுதியில் சம்பவம்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் இரட்டைக் கொலை. மித்தெனிய, கடேவத்த பகுதியில் சம்பவம்!

பகிரவும்
பகிரவும்

2024.01.18 அன்று இரவு 10.15 மணியளவில், மித்தெனிய, கடேவத்த சந்தியில் ஏற்பட்ட ஒரு துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பாதிக்கப்பட்ட நபர், அடையாளம் தெரியாத குழுவினரால் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரின் மகள் மற்றும் மகன் உடனிருந்த நிலையில், மகள் தங்கல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார், மகன் அம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் 39 வயதுடையவரும், அவரது மகள் 6 வயதுடையவளும் ஆவார். அவர்கள் கலுவாத்த பகுதியில் வசிக்கும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், சந்தேக நபர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது..

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...