முகப்பு இலங்கை மிட்வெணிய துப்பாக்கிச் சூடு: மூவர் கொலை – முன்னாள் இராணுவ வீரர்கள் கைது!
இலங்கைசெய்திசெய்திகள்

மிட்வெணிய துப்பாக்கிச் சூடு: மூவர் கொலை – முன்னாள் இராணுவ வீரர்கள் கைது!

பகிரவும்
பகிரவும்

2025.02.18 அன்று மிட்வெணிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூவரைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்ய மிட்வெணிய மற்றும் தங்கல்ல குற்றப்பிரிவு பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

2025.02.21 அன்று மிட்வெணிய பொலிஸ் பிரிவு, வெவபாக்கட, வீரகெட்டிய பொலிஸார் மற்றும் தங்கல்ல குற்றப்பிரிவு பொலிஸ் குழுவின் ஒத்துழைப்புடன், இந்த சந்தேக நபரை மிட்வெணிய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37 மற்றும் 39 வயதுடைய இருவராகும். இவர்கள் வெவபாக்கட மற்றும் வீரகெட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் முன்னாள் இராணுவ வீரர்கள் என்பதோடு, தற்போது இராணுவ சேவையில் இருந்து நீக்கப்பட்டவர்களாக இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மிட்வெணிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

ஸ்ரீலங்கன் விமானம் தொழில்நுட்ப கோளாறால் இந்தோனேசியாவில் அவசர தரையிறக்கம்!

2025 ஜூன் 6 | தமிழ்தீ செய்தியகம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு (ஜூன் 5)...

வொஷிங்டன் வெனடாச்சி பகுதியில் தந்தையுடன் சென்ற மூன்று சகோதரிகள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு – தந்தை தலைமறைவு!

கடந்த மே மாதம் 30ஆம் திகதி வெனடாச்சி பகுதியில் தங்களது தந்தையுடன் காரில் சென்ற சிறுமிகள்...

இலங்கை வெப்ப ஆபத்துப் பட்டியலில்! – உலக வங்கி எச்சரிக்கை!

இலங்கையோடு சேர்ந்து இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளும் தற்போது வெளியில் வேலை செய்ய பாதுகாப்பில்லாத...

இன்றைய ராசி பலன் – 2025 ஜூன் 5 (வியாழக்கிழமை)

🔥 மேஷம் (Aries) தொழிலில் புத்துணர்ச்சி, மேலதிகரிடம் பாராட்டு. உறவுகளில் நம்பிக்கை பிறக்கும். திட்டமிட்டு செயல்படுங்கள்...