முகப்பு அரசியல் நேட்டோ உறுப்புரிமைக்காக பதவியை இராஜினாமா செய்யத் தயார்- உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி!
அரசியல்உலகம்செய்திசெய்திகள்

நேட்டோ உறுப்புரிமைக்காக பதவியை இராஜினாமா செய்யத் தயார்- உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி!

பகிரவும்
பகிரவும்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே தற்போதைய அவசியம் என்பதைக் குறிப்பிட்டு, 20 வருடங்களுக்கு பிறகு அது தேவை என்பதல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தசாப்தம் முழுவதும் அதிபராக தொடர்வதே தனது கனவு அல்ல என்றும் அவர் கூறினார்.

“நான் இந்த பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென்றால், அதற்குத் தயார். உக்ரைன் நேட்டோவில் இணைவதற்காக இதை மாற்றிக் கொடுக்கவும் தயார்,” என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த மூன்று வருடங்களில் அமெரிக்கா வழங்கிய இராணுவ உதவிக்குப் பதிலாக பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுமானால், அமெரிக்கா-உக்ரைன் அபூர்வ கனிம வள ஒப்பந்தத்தை உறுதியாக நிராகரிக்கப் போவதாக அவர் கூறினார்.

இதேவேளை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அதிகாரிகள், இந்த ஒப்பந்தம் இறுதிகட்டத்தில் இருப்பதாகவும், எதிர்வரும் வாரத்தில் ஒப்பந்தம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா உக்ரைனின் $500 பில்லியன் மதிப்புள்ள அபூர்வ கனிம வளங்களை, வொஷிங்டனின் இராணுவ உதவிக்கு பதிலாக பெற்றுக்கொள்ளும் உரிமை வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, செலன்ஸ்கி இந்தக் கோரிக்கையை “தகவல் ஆதாரமற்ற மற்றும் உண்மையானதல்ல” எனக் கூறி, அமெரிக்கா $500 பில்லியன் அளவு கடன் பெற்றுள்ளது என்பது எந்தவிதமான உண்மைசார்ந்த ஆதாரத்திலும் இல்லை என்று தெரிவித்திருந்தார். மேலும், இந்த ஒப்பந்தம் உக்ரைனுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதங்களையும் வழங்காது என்றும் அவர் கூறினார்.

இன்றும், செலன்ஸ்கி $500 பில்லியன் கடன் கணக்கை மீண்டும் மறுத்து, பைடன் வழங்கிய உதவித் தொகைகளை இப்போது கடனாக மாற்றக் கூடாது என வலியுறுத்தினார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...