முகப்பு அரசியல் எதிர்க்கட்சிக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் – ஆளும்கட்சியின் ஆதரவு!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

எதிர்க்கட்சிக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் – ஆளும்கட்சியின் ஆதரவு!

பகிரவும்
பகிரவும்

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு குழுக்களில் அதிக பிரதிநிதித்துவம் வழங்குமாறு எதிர்க்கட்சி அரசியல் காட்சிகள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று (பெப். 22) இடம்பெற்றதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரியவும் கலந்துகொண்டார்.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் கௌரவ சபாநாயகரினால் 2025.02.19 ஆம் திகதி சபையில் அறிவித்த தீர்மானம் தொடர்பில் நன்றி தெரிவித்து இந்த விடயம் சம்பந்தமான ஆளும்கட்சியின் நிலைப்பாட்டை கௌரவ சபை முதல்வர் சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்ததுடன், அந்தக் கடிதம் இதன்போது வாசிக்கப்பட்டது.

அதனையடுத்து, குழுக்களில் எதிர்க்கட்சியின் அங்கத்துவத்தை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சி முதற்கோலாசான் விடுத்த கோரிக்கை தொடர்பில் சாதகமாகக் கருத்திற்கொண்டு ஆளும்கட்சியின் தீர்மானத்தை விரைவாக வழங்குவதாக சபை முதல்வர் இந்தக் கூட்டத்தில் மேலும் தெரிவித்தார்.

தகவல்:- இலங்கை பாராளுமன்றம்

 

 

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...