முகப்பு இலங்கை முல்லைத்தீவில் ‘Made In Mullaitivu’ உற்பத்தியாளர் ஊக்குவிப்பு நிலையம் ஆரம்பம்
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

முல்லைத்தீவில் ‘Made In Mullaitivu’ உற்பத்தியாளர் ஊக்குவிப்பு நிலையம் ஆரம்பம்

பகிரவும்
பகிரவும்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களை ஆதரித்து, ‘Made In Mullaitivu’ என்ற புதிய உற்பத்தி மேம்பாட்டு மையம் இன்று (24) காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு புதிய பஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும், வவுனியா பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் பீடத்தின் பீடாதிபதி யோ.நந்தகோபன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

கனேடிய தமிழர் பேரவையின் நிதி ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இச் செயற்றிட்டம், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி முன்னேற்றம் மட்டுமின்றி, சர்வதேச சந்தை வாய்ப்புகளையும் பெற வழிவகை செய்யப்படும். வெற்றிகரமாக செயல்பட்டால், இது வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளமாக அமையும் என நம்பப்படுகிறது.

நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், இலங்கைக்கான கனேடிய தூதரக அதிகாரிகள், கனேடிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள், நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் என முல்லைதீவு மாவட்ட செயலக தகவல் மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

2025ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மறுஆய்வு பெறுபேறுகள் வெளியீடு

கொழும்பு – இலங்கைத் பரீட்சைத்திணைக்களம் அறிவித்ததாவது, 2025ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் தேர்வின் மறுஆய்வு...

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...