முகப்பு இலங்கை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்கிறது- மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு! (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்கிறது- மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு! (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)

பகிரவும்
பகிரவும்

மினுவன்கொடை, பட்டடுவன சந்தியில் இன்று (26) காலை 11 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பொலிஸ் தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீரென நடத்திய இந்த தாக்குதலில் 36 வயதான ஒருவர் காயமடைந்துள்ளார்.

தாக்குதலின் போது, குறித்த நபர் முச்சக்கர வண்டி நிறுத்துமிடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சம்பவத்திற்குப் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாகவும், காயமடைந்த நபரின் கால் மற்றும் கையில் காயம் ஏற்பட்டதால், அவரை கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், காயமடைந்த நபர் “கெஹெல்பத்தர பத்மே” என அழைக்கப்படும் நபரின் பள்ளி நண்பர் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

சுவிட்சர்லாந்தில் ஆண்களே அதிக எடைகொண்டவர்கள்: புதிய ஆய்வு தகவல்!

சூரிச்: சுவிட்சர்லாந்தில் அதிக எடை கொண்டவர்கள் ஆண்களா, பெண்களா என்ற கேள்விக்கு, சமீபத்திய ஆய்வுகள் ஒரு...

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர்: திருமதி தனுஜா முருகேசன்!

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...

புவியீர்ப்பு விசைக்கு சவால் – உலகின் முதல் தொங்கும் கட்டடம்!

 விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி தொங்கும் புதிய கட்டடத் திட்டம் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீனக்...