முகப்பு இலங்கை நுகர்வோர் அதிகாரசபை மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கிடையிலான சந்திப்பு!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

நுகர்வோர் அதிகாரசபை மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கிடையிலான சந்திப்பு!

பகிரவும்
பகிரவும்

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கிடையிலான விசேட சந்திப்பு கடந்த 25ஆம் திகதி அதிகாரசபையின் மைய காரியாலயத்தில் நடைபெற்றது.

கைத்தொழில் மற்றும் உணவு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உப்பை உயர்தரத்துடன் நியாயமான விலைக்கு சந்தையில் வழங்குவதற்கான தீர்வுகளை உருவாக்குவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.

நுகர்வோர் அதிகாரசபை மேற்கொண்ட சந்தை மதிப்பீட்டின்படி, கடந்த காலத்தில் உப்பின் விலை மாறுபட்டதுடன், நிலவிய உப்பு பற்றாக்குறையும் தொழில்துறையில் ஏற்பட்ட சிக்கல்களும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.

அரச மற்றும் முன்னணி உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட 18 நிறுவனங்கள் கலந்து கொண்ட இச்சந்திப்பில், தற்போதைய சந்தை நிலைமையால் நுகர்வோர் பாதிக்கப்படாமல் உப்பு விலையை நிலைப்படுத்துவதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும், உள்ளூரில் உற்பத்தியாகும் உப்பு மார்ச் மாத இறுதியில் சந்தைக்கு வரவிருக்கின்றதால், அதற்குப் பின்னர் மிகவும் போட்டித்திறனான விலையில் உப்பு கிடைக்கும் என உற்பத்தியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அதுவரை, உப்பு விலையைக் குறைவாக வைத்திருக்க அதிகாரசபை முன்வைத்த கோரிக்கைக்கு அவர்கள் உடன்பட்டுள்ளனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...