முகப்பு இந்தியா இந்திய கடற்படை கப்பல் குதார்: இலங்கை கடற்படையுடன் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம்!
இந்தியாஇலங்கைசெய்திசெய்திகள்

இந்திய கடற்படை கப்பல் குதார்: இலங்கை கடற்படையுடன் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம்!

பகிரவும்
பகிரவும்

இந்திய கடற்படை கப்பல் (INS) குதார், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட குக்ரி வகை கார்வெட், மார்ச் 3, 2025 அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. மூன்று நாள் பயணமாக வந்த 91.1 மீட்டர் நீளமான இந்தக் கப்பல், கமாண்டர் நிதின் சர்மா தலைமையில் 129 பேர் கொண்ட குழுவால் இயக்கப்படுகிறது. இலங்கை கடற்படை பாரம்பரிய முறையில் கப்பலை வரவேற்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

கப்பலின் தளபதி கமாண்டர் நிதின் சர்மா, மேற்கு கடற்படை பகுதி தளபதி ரியர் அட்மிரல் MHCJ சில்வாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். குதார், இலங்கை கடலோர காவல்கடற்படை கப்பல் (SLCGS) சுரக்ஷா க்கு மீள்த்தீர்வு செய்யப்பட்ட தீயணைப்பு சிலிண்டரை வழங்கியது.

SLCGS சுரக்ஷா என்பது இந்திய அரசால் அக்டோபர் 2017 இல் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒரு கடலோர பாதுகாப்பு கப்பலாகும். இந்தியா ஜூன் 2021, ஏப்ரல் 2022, ஜூன் 2024 ஆகிய காலங்களில் இந்தக் கப்பலுக்கான உதிரிபாகங்களை வழங்கியுள்ளது. ஜனவரி 2024-இலும் சிலிண்டர் மீள்த்தீர்வு உதவிகள் அளிக்கப்பட்டன.

இலங்கை கடற்படை வீரர்களுக்காக INS குதார் கப்பலில் தொழில்துறை பயிற்சிகள் நடத்தப்படும். Visit Board Search and Seizure (VBSS) மற்றும் Force Protection நடவடிக்கைகளின் செயல்பாட்டு விளக்கங்கள் இலங்கை கடற்படை வீரர்களால் INS குதார் குழுவினருக்கு வழங்கப்படும். கடற்படை வீரர்கள் இடையே விளையாட்டு போட்டிகள் மற்றும் யோகா அமர்வுகள் நடைபெறும்.

இந்த பயணம் இந்தியா – இலங்கை கடற்படைகள் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது மற்றும் பிராந்திய கடல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மிக முக்கியமானதாகும். INS குதார் மார்ச் 6. 2025 அன்று இலங்கையை விட்டு புறப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...