முகப்பு இலங்கை வாகன இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு – 6 மாதங்களில் பதிவு அவசியம்!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

வாகன இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு – 6 மாதங்களில் பதிவு அவசியம்!

பகிரவும்
பகிரவும்

எந்தவொரு இறக்குமதி செய்பவரும் இறக்குமதி செய்த மொத்த வாகன எண்ணிக்கையின் 25%க்கும் மேற்பட்டவை 6 மாதங்களுக்குள் பதிவு செய்யப்படாவிட்டால் இறக்குமதியாளரின் இறக்குமதி அனுமதி இடைநிறுத்தப்படும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு நாணய காப்பகத்தை பாதுகாப்பதற்கும், அதிகமான வாகனங்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதற்கும், தேவையற்ற மோட்டார் வாகனக் குவியலை தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், தனிப்பட்ட முறையில் வாகனங்களை இறக்குமதி செய்யும் நபர்களுக்கு ஒரே ஒரு வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்யும் அனுமதி வழங்கப்படும். இவர்களுக்கு இந்த புதிய நிபந்தனைகள் பொருந்தாது என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற அரசாங்கத்தின் நிதி தொடர்பான குழுக் கூட்டத்தில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் உபுல்மாலி பிரேமதிலக அவர்கள், கூட்டத்தின்போது இதுபற்றி தனது கருத்துகளை வெளியிட்டார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...