முகப்பு இலங்கை வவுனியாவில் வீட்டில் தனியாக இருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

வவுனியாவில் வீட்டில் தனியாக இருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

பகிரவும்
பகிரவும்

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டில் மரணமடைந்த நிலையில் நேற்று (07) மாலை மீட்கப்பட்டார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரிக்குளம் 3 ஆம் ஒழுங்கைச் சேர்ந்த வீட்டில் அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது வீட்டில் அவர் மட்டும் இருந்தார், ஏனெனில் அவரது மனைவி ஆசிரியையாக பணிபுரியும் காரணத்தால் பாடசாலைக்கு சென்றிருந்தார்.

பாடசாலை முடிந்து பிற்பகல் 1.45 மணியளவில் மனைவி வீடு திரும்பி கதவைத் திறக்க முயன்றபோது, நீண்ட நேரமாக பதில் கிடைக்கவில்லை.

அயலவர்களின் உதவியுடன் மதிலால் ஏறிச் சென்று கதவைத் திறந்தபோது, கணவர் அறையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டுபிடித்தனர். மேலும், அவரது தலையில் காயம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி, உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணையில், வீட்டில் உள்ள கட்டிலின் மேல் ஏறி சுவருக்கு வர்ணம் பூசும்போது தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...