முகப்பு உலகம் டொமினிகன் குடியரசில் மர்மமாக காணாமல் போன அமெரிக்க மாணவி!
உலகம்சமூகம்செய்திசெய்திகள்

டொமினிகன் குடியரசில் மர்மமாக காணாமல் போன அமெரிக்க மாணவி!

பகிரவும்
பகிரவும்

20 வயது மாணவி சுதிக்ஷா கோனாங்கி, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார். சமீபத்தில், நண்பர்களுடன் டொமினிகன் குடியரசுக்கு சுற்றுலா சென்றார். அவர்கள் புன்டா கானாவில் உள்ள ரியு ரெப்யூப்ளிகா ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

சுதிக்ஷா, கடற்கரையில் பிகினி உடையில் நடந்து சென்றபோது, மர்மமான முறையில் காணாமல் போனார். தகவல் கிடைத்ததும், டொமினிகன் குடியரசின் அதிகாரிகள் விரைந்து தேடுதல் பணியை தொடங்கினர். கடல்பரப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் தீவிரமாக நடத்தப்படுகிறது.

போலீசார், சுதிக்ஷாவின் தோழிகளை விசாரணைக்கு உட்படுத்தி தகவல்களை சேகரித்துள்ளனர். அவர்கள் தெரிவித்ததன்படி, மார்ச் 6ம் தேதி அதிகாலை 4 மணிக்கு, ரிசார்ட்டின் கடற்கரைக்கு சென்றனர். மற்ற நண்பர்கள் திரும்பிவிட்ட நிலையில், சுதிக்ஷா மட்டும் காணாமல் போனதாக கூறியுள்ளனர்.

இது குறித்து அவரது தந்தை சுப்பராயுடு கூறுகையில், “எனது மகளை மீட்பதற்காக அதிகாரிகள் கடல், கடற்கரை மற்றும் சுற்றியுள்ள புதர்கள், மரங்களை வெகுவாக தேடி வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் உதவியுடனும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை எந்தக் குறிப்பான தகவலும் கிடைக்கவில்லை,” என்றார். மேலும், “என் மகள் மிகவும் திறமையானவர். மருத்துவ துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம்” என தெரிவித்தார்

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...