முகப்பு அரசியல் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதிமன்றத்திலிருந்து திறந்த பிடியாணை!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதிமன்றத்திலிருந்து திறந்த பிடியாணை!

பகிரவும்
பகிரவும்

மாத்தறை மகேஸ்திரேட் நீதிமன்றம் முன்னைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் க்கு திறந்த பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

இது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்கச் செய்யப்பட்டதாகும்.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட எட்டு பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு மாத்தறை மகேஸ்திரேட் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.

2023 டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை – வெலிகம – பலேனா பிரதேசத்தில் உள்ள W 15 ஹோட்டலுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இச் சம்பவத்தில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் சர்ஜெண்ட் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது 11 நாட்களாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்கள், நேற்று (10) தனது சட்டத்தரணிகள் மூலம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் செயற்பாட்டு தலைவர் மொஹமட் லஃபார் தாஹீர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகிய நீதியரசர்கள் கொண்ட அமர்வு நேற்று (10) பரிசீலித்தது.

அதில், பதிலளிப்பவர்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்ட பின்னர், இந்த மனுவை மீண்டும் மார்ச் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...