முகப்பு இலங்கை இலங்கையில் இன்றுள்ள இன குழுக்கள்.
இலங்கைகட்டுரைகள்கல்விசமூகம்செய்திகள்

இலங்கையில் இன்றுள்ள இன குழுக்கள்.

பகிரவும்
பகிரவும்
ஆக்கம் :- ராஜா
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து பல்லின பண்பாடுகள் இலங்கையில் இருந்து வந்துள்ளன. ஏறக்குறைய 2500 ஆண்டு காலப்பகுதியில் பல பல்லினக் குழுக்கள் இணைந்து இரு  பேரினக் குழுக்கள் ஆதிக்கம் பெற்றன. அவை சிங்கள இனக்குழு மற்றொன்று தமிழினக்குழு.
கி பி ஆறாம் நூற்றாண்டு அளவில் அரேபிய முஸ்லிம் வணிகர்கள் வருகையுடன் மூன்றாவது முக்கிய இனக்குழுவாக இலங்கை முஸ்லிம்கள் இலங்கையில் உருவாகினர். 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையுடன் பறங்கியர் என்ற இனக்குழுவும் உருவாகினர்.
ஐரோப்பியர் ஆட்சியில் தமது படைவீரர்களாக இந்தோனேசியர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து மலாய் இனக்குழு ஒன்று இலங்கையில் தோற்றம் பெற்றது.  இருபதாம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆட்சியில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைக்காக தென்னிந்திய தமிழர்கள் கொண்டுவரப்பட்டதை அடுத்து மலையக தமிழ் இனக்குழு ஒன்றும் உருவாகியது.
இக் குழுக்களில் பறங்கியர் என்ற இனக்குழு சிங்களவர் பகுதியில் சிங்கள இனக்குழுக்களுடனும் தமிழர் பகுதியில் தமிழ் இனக் குழுக்களுடனும் கலந்து தனது தனித்துவத்தை இழந்து மறைந்து வருகின்றது.  அதுபோல மலையர் இனக்குழு பெரும்பாலும் மதரீதியான செல்வாக்கால் முஸ்லிம் என்ற இனக்குழுவுடன் கலந்து மறைந்து வருகின்றது.
இன்று இலங்கையில் சிங்களவர் என்ற இனக்குழு, இலங்கையிலிருந்த தமிழர்களும் மலையக தமிழர்களும் ஓரளவு கலந்து தமிழர் என்ற இனக் குழுவும், முஸ்லிம்கள் என்ற இனக் குழுவும்  என மூன்று முக்கிய இனக் குழுக்களாக காணப்படுகின்றன.
பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

ஜெர்மனியில் ஜெர்மன் ஜனாதிபதியை இலங்கை ஜனாதிபதி சந்திப்பு!

ஜெர்மனிய கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களை...

சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்: பாடசாலைகளில் முறைப்பாடுகள் மூடி மறைக்கப்படக்கூடாது – ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்தல்

வடக்கு மாகாண பாடசாலைகளில் குழந்தைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முறைப்பாடுகள் எழுகின்றன என்ற காரணத்தினால், அவை...

சீமெந்து விலை இன்று முதல் அதிகரிப்பு!

ஜூன் 8, 2025 – தமிழ்தீ இலங்கையில் இன்று (ஜூன் 8) முதல் 50 கிலோ...

சட்ட ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளதாக நமல் ராஜபக்ஷக் குற்றச்சாட்டு!

நாட்டில் சமீபத்தில் அதிகரித்த குற்றச்செயல்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள SLPP பாராளுமன்ற...