முகப்பு இலங்கை மட்டக்களப்பில் கொடூரம் – பச்சிளம் குழந்தையை குப்பையில் வீசிச் சென்ற தாய்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

மட்டக்களப்பில் கொடூரம் – பச்சிளம் குழந்தையை குப்பையில் வீசிச் சென்ற தாய்!

பகிரவும்
பகிரவும்

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவின் தேவபுரம் மைதானம் அருகே உள்ள காட்டு பகுதியில், குப்பையில் வீசப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் இன்று (15) மீட்கப்பட்டது.

பொலிஸ் தரப்பில் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, முறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில், இன்று காலை 9.00 மணியளவில், ஆண் குழந்தை ஒன்றின் சடலம் இருப்பதை பொதுமக்கள் கண்டே பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

இதற்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், நீதிமன்ற உத்தரவுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், குறித்த குழந்தை இன்று பிறந்ததற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், அதனை உரைப்பையில் கட்டி கொண்டு வந்து குப்பையில் வீசி சென்ற தாயை கண்டுபிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 5, 2025 (சனிக்கிழமை)!

இன்று சந்திரன் மகரத்தில் சஞ்சரிப்பதனாலும் சனி பகவானின் நாள் என்பதனாலும் பொதுவாக சீர்திருத்தம், பொறுப்பு, கடமை, சோதனை...

2026 ம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பு இடம்!

இன்று (04) முதல் அமைச்சர் டொக்டர் ஹரினி அமரசூரிய கம்பஹா தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் ஒன்றை...

யாழின் மையப்பகுதியில் வீதியின் நிலை!

யாழ் நகரின் முற்றவெளிக்கு  அருகே உள்ள பண்ணை வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பாரிய குன்றும்...

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா உட்பட மூவர் பிணையில் விடுவிப்பு – வெளிநாட்டு பயணம் தற்காலிகமாகத் தடை!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மற்றும்  இருவர் இன்று (ஜூலை 3)...