முகப்பு உலகம் உலகை உலுக்கிய விமான விபத்து: பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு.
உலகம்செய்திசெய்திகள்

உலகை உலுக்கிய விமான விபத்து: பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு.

பகிரவும்
பகிரவும்

ஹோண்டுராஸ்: மத்திய அமெரிக்க நாட்டான ஹோண்டுராஸில் விமான விபத்து ஏற்பட்டதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் உயிர் தப்பியுள்ள நிலையில், 1 நபர் காணாமல் போயுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டுராஸின் ரோவாடான் என்ற தீவிலிருந்து லான்சா ஏர்லைன்ஸ் சார்ந்த சிறிய ரக வர்த்தக விமானம் 17 பயணிகளுடன் திங்கட்கிழமை இரவு புறப்பட்டு லா சீபா நகரம் நோக்கி சென்றது. கடலுக்கு மேலே பறக்கும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

விமானம் விழுந்ததை அப்பகுதி மீனவர்கள் கண்டு, உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில், பிரபல இசைக்கலைஞர் ஆரேலியா மார்டினெஸ் சுவாஜோ உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

காவல்துறையின் தகவலின்படி, விமானம் முழுமையான உயரத்தை எட்ட முடியாமல் கடலில் மூழ்கியது. காணாமல் போன நபருக்கான தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த பரிதாபமான விமான விபத்து, உலகளவில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Source :- Canada mirror

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

புவியீர்ப்பு விசைக்கு சவால் – உலகின் முதல் தொங்கும் கட்டடம்!

 விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி தொங்கும் புதிய கட்டடத் திட்டம் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீனக்...

‘ஹாரக் கட’ நீதிமன்றில் ஆஜர்: லஞ்சக் குற்றச்சாட்டுகளால் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

கொழும்பு, மே 20, 2025 – பாதாள உலகக் குழுக்களின் முன்னணி நபரான நாதுன் சிந்தக...

12 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் தாய் மகள் உட்படமூவர் கட்டுநாயக்கவில் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பு! தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சுமார் 12...

குறைந்த வருமானம் பெறுவோருக்கு வட்டி வரியில் நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இன்லாண்ட் ரெவன்யூ (திருத்தச் சட்டம்) எண்...