முகப்பு உலகம் உலகை உலுக்கிய விமான விபத்து: பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு.
உலகம்செய்திசெய்திகள்

உலகை உலுக்கிய விமான விபத்து: பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு.

பகிரவும்
பகிரவும்

ஹோண்டுராஸ்: மத்திய அமெரிக்க நாட்டான ஹோண்டுராஸில் விமான விபத்து ஏற்பட்டதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் உயிர் தப்பியுள்ள நிலையில், 1 நபர் காணாமல் போயுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டுராஸின் ரோவாடான் என்ற தீவிலிருந்து லான்சா ஏர்லைன்ஸ் சார்ந்த சிறிய ரக வர்த்தக விமானம் 17 பயணிகளுடன் திங்கட்கிழமை இரவு புறப்பட்டு லா சீபா நகரம் நோக்கி சென்றது. கடலுக்கு மேலே பறக்கும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

விமானம் விழுந்ததை அப்பகுதி மீனவர்கள் கண்டு, உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில், பிரபல இசைக்கலைஞர் ஆரேலியா மார்டினெஸ் சுவாஜோ உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

காவல்துறையின் தகவலின்படி, விமானம் முழுமையான உயரத்தை எட்ட முடியாமல் கடலில் மூழ்கியது. காணாமல் போன நபருக்கான தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த பரிதாபமான விமான விபத்து, உலகளவில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Source :- Canada mirror

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

2026 ம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பு இடம்!

இன்று (04) முதல் அமைச்சர் டொக்டர் ஹரினி அமரசூரிய கம்பஹா தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் ஒன்றை...

யாழின் மையப்பகுதியில் வீதியின் நிலை!

யாழ் நகரின் முற்றவெளிக்கு  அருகே உள்ள பண்ணை வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பாரிய குன்றும்...

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா உட்பட மூவர் பிணையில் விடுவிப்பு – வெளிநாட்டு பயணம் தற்காலிகமாகத் தடை!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மற்றும்  இருவர் இன்று (ஜூலை 3)...

ஸ்டார்லிங்கின் உள்நுழைவு: இலங்கையில் அதிகாரப்பூர்வமாக செயற்படத் தொடங்கியது

பல கோடி முதலீட்டாளரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலோன் மஸ்க் புதன்கிழமையன்று சமூக ஊடகமான...