முகப்பு இலங்கை 47 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சிராப்பள்ளி (தமிழ்நாடு) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே நேரடி விமான சேவை
இலங்கைசெய்திசெய்திகள்

47 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சிராப்பள்ளி (தமிழ்நாடு) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே நேரடி விமான சேவை

பகிரவும்
பகிரவும்

திருச்சிராப்பள்ளி (தமிழ்நாடு) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே நேரடி விமான சேவை இன்று 47 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியது.

போர்நிலைக்காரணமாக யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், 2019-ஆம் ஆண்டு விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. அதன்பிறகு, சென்னை – யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டன.

தமிழ்நாட்டின் பிற நகரங்களிலிருந்து, குறிப்பாக திருச்சிராப்பள்ளியிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், தற்போது திருச்சிராப்பள்ளி – யாழ்ப்பாணம் விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானம் மதியம் 1:25 மணிக்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்டு, 2:25 மணிக்கு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை அடையும். அதேபோல், யாழ்ப்பாணத்திலிருந்து 3:05 மணிக்கு புறப்பட்டு, 4:05 மணிக்கு திருச்சிராப்பள்ளி வந்தடையும்.

இந்த சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் (IndiGo Airlines) இயக்கும்.

திருச்சிராப்பள்ளி – யாழ்ப்பாணம் இடையிலான விமான பயணத்திற்கான பயணக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வழிப் பயணத்திற்கு ரூ. 20422.00 முதல் ரூ. 22153.00 வரை இருக்கலாம்.

இன்று முதல் பயணத்தில், மொத்தம் 27 பயணிகள் பலாலி விமான நிலையத்தை 2:02 மணிக்கு வந்தடைந்தனர். மேலும், பலாலியிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு 36 பயணிகளுடன் விமானம் மதியம் 3:00 மணியளவில் புறப்பட்டது.

இந்த முதல் விமான சேவையை முன்னிட்டு, இந்திய துணை தூதரக அதிகாரி சாய் முரளி தலைமையிலான குழு கேக் வெட்டி கொண்டாடியது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

வாழ்க்கையை உல்லாசப்பயணமாக மாற்றிய இருவர் – குழந்தை மரணம்-இறுதியில் சிறைக்கு வழி!

லண்டன் | ஜூலை 14:கொன்ஸ்டன்ஸ் மார்டன் மற்றும் மார்க் கார்டன் ஆகியோர், “மிகவும் கவனக்குறைவான காரணத்தால்...

உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யாவின் ரோன் தாக்குதலில் நால்வர் உயிரிழப்பு

BBC-உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யாவை ஒட்டியுள்ள சுமி நகரில் இடம்பெற்ற ரஷ்யாவின் கடும் தாக்குதலில் நால்வர்...

இன்றைய ராசி பலன் – 14 ஜூலை 2025 (திங்கட்கிழமை)!

இன்று உங்கள் மனதில் எழும் எண்ணங்களை நேர்மையாக செயல்படுத்த நீங்கள் வாய்ப்பு பெறலாம். பெரிய முடிவுகள்...

சீனாவின் அதிசய பலூன் கட்டிடம் – உலகத்தையே வியக்க வைத்த கண்டுபிடிப்பு!

சீனாவின் புதிய கட்டிடம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் இது முற்று முழுதாக பலூன் போன்ற அமைப்பை...