முகப்பு இலங்கை வீதியில் இளம்பெண்ணை முரட்டுத்தனமாக தாக்கிய சம்பவம் – பொலிஸார் நடவடிக்கை எடுக்குமா?
இலங்கைசெய்திசெய்திகள்

வீதியில் இளம்பெண்ணை முரட்டுத்தனமாக தாக்கிய சம்பவம் – பொலிஸார் நடவடிக்கை எடுக்குமா?

பகிரவும்
பகிரவும்

நேற்றைய தினம், ஒரு இளம்பெண் வீதியில் அனைவரின் முன்னிலையில் ஒரு இளைஞர் முரட்டுத்தனமாக தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.

தகவலின்படி, பாதிக்கப்பட்ட இளம்பெண் DASH நிறுவனத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று, கடமையை முடித்து வீட்டிற்குத் திரும்பும் வழியில், பேருந்திலிருந்து இறங்கிய வேளையில், குறித்த இளைஞர் அவரை தடியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்திய இளைஞர் முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னசாளம்பன் கிராமத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார். இதே இடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குறித்த நபரை கைது செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது. பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும், அவர்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து இட்டு வருகின்றனர்!

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...