முகப்பு அரசியல் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறைத் தலைவர் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறைத் தலைவர் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது!

பகிரவும்
பகிரவும்

2023ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை – வெலிகம – பெலேன பகுதியில் உள்ள W15 ஹோட்டலின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறைத் தலைவர் தேசபந்து தென்னகோனுக்கு இன்று (10) மாத்தறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அவருக்கு ஒருவர் ரூ.10 இலட்சம் என இரண்டு உறுதிமொழிகளுடன் பிணை வழங்கப்பட்டது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருந்தார்.

சம்பவத்துக்குப் பிறகு பல வாரங்கள் தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன் கடந்த மார்ச் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரை ஏப்ரல் 3ஆம் திகதி வரையும் பின்னர் ஏப்ரல் 10ஆம் திகதி வரை மீண்டும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு வழங்கப்பட்டது. இன்று நடைபெற்ற வழக்கில் மாத்தறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிள்ளையான் 90 நாள் தடுப்புக் காவலில்!

பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அவர்கள்  கடந்த 8ஆம் தேதி குற்றப்...

ஃப்ளோரிடாவில் சிறிய விமானம் கீழே விழுந்ததால் மூவரும் உயிரிழப்பு!

ஃப்ளோரிடா மாநிலம், போக்கா ராடோனில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சிறிய விமானம் இடிபட்டதில், அதில் பயணித்த...

வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை நபரும் நாயும் உயிரிழப்பு – மலேசியாவில் சம்பவம்!

இன்று காலை, சிலாங்கூரின் ஷா ஆலம் நகரம், தாமான் அலாம் இந்தா பகுதியில் உள்ள கட்டிடப்...

முல்லைத்தீவு விசுவமாடு  பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கிப் பயணித்த பேருந்து வயலில் பாய்ந்து விபத்து!

முல்லைதீவில்  இருந்து  புளியம்பொக்கணை நோக்கிப் பயணித்த பேருந்து வீதியிலிருந்து விலகி வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்...