முகப்பு இலங்கை உள்ளூராட்சி தேர்தல் 2025 : நியமன நிராகரிப்புக்கு எதிரான வழக்குகள் தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பிக்கவும்!
இலங்கைசெய்திசெய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் 2025 : நியமன நிராகரிப்புக்கு எதிரான வழக்குகள் தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பிக்கவும்!

பகிரவும்
பகிரவும்

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழுத் தலைவர்கள் அனைவருக்குமான அறிவித்தல் ஒன்று தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

2025 மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட நியமனக் கடிதங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து எடுத்துள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மனுக்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் பிரதிகளை, தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வகையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், உரிய ஆவணங்களை விரைவில் கையளிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் தேர்தல் செயல்முறை சரியான முறையிலும், சட்டரீதியிலும் நடைபெறுவதற்காக இவ்வாயிலாக தேவையான சட்ட தெளிவை பெறுவது மிகவும் முக்கியமெனவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...