முகப்பு இலங்கை மட்டக்களப்பு சந்திவெளியில் சோகம் நிறைந்த விபத்து – திருமணமாகி ஒன்பது நாட்களே ஆன இளைஞன்….!
இலங்கைசெய்திசெய்திகள்

மட்டக்களப்பு சந்திவெளியில் சோகம் நிறைந்த விபத்து – திருமணமாகி ஒன்பது நாட்களே ஆன இளைஞன்….!

பகிரவும்
பகிரவும்

மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், புதிதாக திருமணமான இளைஞர் ஒருவர் உயிரிழந்த சோகமான சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம், சந்திவெளி பிரதான வீதியில் சந்தை முன்பாக மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், சந்திவெளியை சேர்ந்த 27 வயதுடைய வடிவேல் மோகன்சாந்தன் என்பவராவார். கடந்த 9 நாட்களுக்கு முன்னரே திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த இவர், குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளார்.

மற்றொரு இளைஞர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமூக சேவைகள் மற்றும் கிராம நிகழ்வுகளில் சிறுவயதிலிருந்து ஈடுபாடுடன் செயல்பட்டு வந்த மோகன்சாந்தன், இன்று இரவு நடக்கவிருந்த கரப்பந்தாட்ட போட்டிக்காக உணவு கொள்வனவு செய்ய வந்த போதே  இந்த துயரகரமான விபத்தில் சிக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

சந்திவெளி பொலிஸார் சம்பவத்துக்கு தொடர்புடைய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம், அவரது குடும்பத்தினரையும், நண்பர்கள் மற்றும் சந்திவெளி கிராம மக்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...