முகப்பு இலங்கை தங்கக் கடத்தல் முயற்சி: தலைமன்னாரில் 8.96 கிலோ தங்கத்துடன் இருவர் கைது!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

தங்கக் கடத்தல் முயற்சி: தலைமன்னாரில் 8.96 கிலோ தங்கத்துடன் இருவர் கைது!

பகிரவும்
பகிரவும்

கடல் வழியிலே கடத்தத் திட்டமிடப்பட்டிருந்த சுமார் 8 கிலோ 960 கிராம் தங்கம் கொண்ட பொதியுடன் சந்தேக நபர்கள் இருவர் தலைமன்னாரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் சந்தேகநபர்கள் இருவரும் மற்றும் ஒரு படகு ஆகியன தலைமன்னார் ஊருமலை பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்ரல் 21ஆம் திகதி, வட மத்திய கடற்படை கட்டுப்பாட்டு பிரிவின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படையின் தம்மன்னா முகாமுக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் தலைமன்னார் ஊருமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், 8 கிலோ 960 கிராம் தங்கம் மற்றும் அந்தத் தங்கத்தை கடல் வழியிலே கடத்தத் திட்டமிடப்பட்ட படகு ஆகியன, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சுங்கத்துறை விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...

வருட முடிவுக்குள் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும் – ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க அறிவிப்பு!

பண்டாரவள, அக்டோபர் 12:இந்த ஆண்டின் முடிவுக்கு முன் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும்...