கடல் வழியிலே கடத்தத் திட்டமிடப்பட்டிருந்த சுமார் 8 கிலோ 960 கிராம் தங்கம் கொண்ட பொதியுடன் சந்தேக நபர்கள் இருவர் தலைமன்னாரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சந்தேகநபர்கள் இருவரும் மற்றும் ஒரு படகு ஆகியன தலைமன்னார் ஊருமலை பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்ரல் 21ஆம் திகதி, வட மத்திய கடற்படை கட்டுப்பாட்டு பிரிவின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படையின் தம்மன்னா முகாமுக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் தலைமன்னார் ஊருமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், 8 கிலோ 960 கிராம் தங்கம் மற்றும் அந்தத் தங்கத்தை கடல் வழியிலே கடத்தத் திட்டமிடப்பட்ட படகு ஆகியன, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சுங்கத்துறை விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கருத்தை பதிவிட