முகப்பு இலங்கை தங்கக் கடத்தல் முயற்சி: தலைமன்னாரில் 8.96 கிலோ தங்கத்துடன் இருவர் கைது!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

தங்கக் கடத்தல் முயற்சி: தலைமன்னாரில் 8.96 கிலோ தங்கத்துடன் இருவர் கைது!

பகிரவும்
பகிரவும்

கடல் வழியிலே கடத்தத் திட்டமிடப்பட்டிருந்த சுமார் 8 கிலோ 960 கிராம் தங்கம் கொண்ட பொதியுடன் சந்தேக நபர்கள் இருவர் தலைமன்னாரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் சந்தேகநபர்கள் இருவரும் மற்றும் ஒரு படகு ஆகியன தலைமன்னார் ஊருமலை பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்ரல் 21ஆம் திகதி, வட மத்திய கடற்படை கட்டுப்பாட்டு பிரிவின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படையின் தம்மன்னா முகாமுக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் தலைமன்னார் ஊருமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், 8 கிலோ 960 கிராம் தங்கம் மற்றும் அந்தத் தங்கத்தை கடல் வழியிலே கடத்தத் திட்டமிடப்பட்ட படகு ஆகியன, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சுங்கத்துறை விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

சீமெந்து விலை இன்று முதல் அதிகரிப்பு!

ஜூன் 8, 2025 – தமிழ்தீ இலங்கையில் இன்று (ஜூன் 8) முதல் 50 கிலோ...

சட்ட ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளதாக நமல் ராஜபக்ஷக் குற்றச்சாட்டு!

நாட்டில் சமீபத்தில் அதிகரித்த குற்றச்செயல்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள SLPP பாராளுமன்ற...

உக்ரைனின் கீவ் மீது ரஷ்யா தீவிரமான வான்வழி தாக்குதல்!

உலகத்தை உலுக்கியவாறு, ரஷ்யா கடந்த இரவிலிருந்து இன்று அதிகாலை வரை உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட...

சிறைகள் நிரம்பிய நிலையிலில் – விசாரணைக்காக கைது செய்யப்பட்டவர்களே அதிகம்!

இலங்கையின் சிறைகள் தற்போதும் மிகவும் பெரிதாக நிரம்பிய நிலையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கைதிகள் குற்றவாளிகள்...