முகப்பு அரசியல் மே 6ஆம் திகதி நடைபெறும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஒரே ஒரு புள்ளடி மட்டும் இடுக!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

மே 6ஆம் திகதி நடைபெறும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஒரே ஒரு புள்ளடி மட்டும் இடுக!

பகிரவும்
பகிரவும்

மே 6ஆம் திகதி நடைபெறும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஒரே ஒரு புள்ளடி மட்டும் இடுக!

மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில், ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரே ஒரு வாக்குப் பத்திரம் வழங்கப்படும், மேலும் அந்த வாக்குப் பத்திரத்தில் ஒரே ஒரு குறி (புள்ளடி)மட்டுமே இட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குப் பத்திரத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் சின்னங்கள், சுயாதீன குழுக்கள் போட்டியிடும் போது “சுயாதீன குழு” என்ற சொல்லும், அடையாள இலக்கம் மற்றும் சின்னமும் மட்டுமே அச்சிடப்படும். வேட்பாளர்களின் பெயர்கள் அல்லது பிரதேச எண்கள் அதில் அச்சிடப்படமாட்டாது.

வாக்களிக்கும் போது, நீங்கள் ஆதரிக்கும் கட்சி அல்லது சுயாதீன குழுவின் சின்னத்திற்கு வலப்புறம் உள்ள வெற்றிடத்தில் ஒரு குறியை (புள்ளடி) மட்டும் இட வேண்டும்.

வாக்குப் பத்திரத்தில் வேறு எந்த வகையான குறியீடுகளும், வரைவதும், எழுதுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...