ஸ்விட்சர்லாந்தின் வொல்லெராவ் (Wollerau) என்ற பகுதியில் நடந்த சம்பவம் ஒன்றின் காரணமாக 42 வயதுடைய ஒருவர் தற்போது கடுமையான சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார். போலீசாரை எதிர்த்த வன்முறை மற்றும் அச்சுறுத்தலுக்கு இணையாக அவர் மீது அரசுத் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த சம்பவம் 2024 ஆகஸ்ட் மாதம் ஒரு சனிக்கிழமையன்று பிற்பகலில் நடைபெற்றது. குறித்த நபர் அவரது குடியிருப்பில் கோபமாக இருந்து மரத்தளபாடங்களை சேதப்படுத்தியதாக அவரது தந்தையால் போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
ஆரம்பத்தில் அந்த நபரை அவர்கள் சமாதானப்படுத்த முடிந்தது. ஆனால் சில நேரத்துக்குப் பிறகு, அவர் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து போலீசாரை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டார். அவர் தனது முழங்காலால் பெண் போலீசாரை அடிக்க முயன்றதோடு, மிரட்டல்களும் விடுத்தார்.
அவரை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார் அவரை தரையில் கீழே கொண்டு செல்ல வேண்டிய நிலை உருவானது. ஆனால் அப்போதும் அவர் தாக்குதல் தொடர்ந்தார். அவர் பெண் போலீசாரை உதைத்து ஆண் போலீசரின் தொடையில் பலமுறை கடிக்க முயன்றார்.
இந்த சம்பவத்திற்கு நீதிமன்றம் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது. இதற்காக அவர் 5400 பிராங்குகள் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளார்.
கருத்தை பதிவிட