முகப்பு அரசியல் கேப்பாபிலவில் பரபரப்பு: அமைச்சரின் குழுவால் சங்கத் தலைவர் தாக்கம் – மக்கள் அதிர்ச்சி
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

கேப்பாபிலவில் பரபரப்பு: அமைச்சரின் குழுவால் சங்கத் தலைவர் தாக்கம் – மக்கள் அதிர்ச்சி

பகிரவும்
பகிரவும்

முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் 24.04.2025  விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர்  சந்திரசேகரன், கேப்பாபிலவு கிராமத்திற்கு சென்றிருந்தார். அங்கு உள்ள இரண்டு வேட்பாளர்களுடன் இணைந்து, கிராமத்தில் உள்ள  சீரமைக்கப்பட வேண்டிய வீதியை பார்வையிட அவர் சென்றிருந்தார்.

அந்த நேரத்தில், கேப்பாபிலவின் கடற்றொழில் சங்கத் தலைவர் செபார்சியாம்பிள்ளை சுகிர்தன் அவர்களையும் அழைத்து, குறித்த வீதியை விரைவில் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவித்தார். ஆனால், அந்த இடத்தில் இருந்த சில கிராம மக்கள் மற்றும் கடற்றொழில் சங்கத் தலைவர் , இதுபோன்று முந்தைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தேர்தல் காலத்தில் வந்து, இதே வீதியை சீரமைப்பதாக வாக்குறுதி அளித்ததாக தெரிவித்தனர்.

வீதி பார்வைக்காக சென்ற போது அமைச்சரின் வாகன ஓட்டுநர் ஒருவர், கடற்றொழில் சங்கத் தலைவர் சுகிர்தனின் முதுகில் சப்பாத்துக் காலால் உதைத்து தாக்குதல் நடத்தினர் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு சிறிய அளவிலான கலவரம் ஏற்பட்டு, கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு கூடியுள்ளனர்.

அமைச்சர் சந்திரசேகரன், சம்பவ இடத்திலிருந்து விரைவாக வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம், “புதிய அமைச்சர்களும் பழையவர்களைவிட வித்யாசமில்லை” என்ற மக்கள் வருத்தத்தையும், நம்பிக்கை இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...