ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டாம் உலகப் போரில் நாசி ஜெர்மனியின்மீது சோவியத் வெற்றியின் 80வது ஆண்டு நினைவாக, மே 8 முதல் 10 வரை உக்ரைனில் மூன்று நாள் போர்நிறுத்தம் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மனிதாபிமான காரணங்களுக்காக எடுக்கப்பட்டதாக கிரெம்லின் தெரிவித்துள்ளது.
ஏன் காத்திருக்க வேண்டும்?
உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, “ஏன் மே 8 வரை காத்திருக்க வேண்டும்? உண்மையான அமைதிக்காக இப்போது போர்நிறுத்தம் செய்யலாம்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி, “நாம் ஒரு நிமிடத்திற்கும் இந்தப் போரை விரும்பவில்லை. மனித உயிர்கள் முக்கியம் விழாக்கள் அல்ல” என்று வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நிலைமை
இந்த போர்நிறுத்தம், ரஷ்யாவின் வெற்றி தினக் கொண்டாட்டங்களுடன் இணைக்கப்பட்டு, சீனா மற்றும் செர்பியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்தை பதிவிட