முகப்பு உலகம் சுவிட்சர்லாந்தில் அதிவேக ஓட்டம் – இரு இளம் ஓட்டுநர்களின் உரிமம் பறிமுதல், குற்றவியல் விசாரணை ஆரம்பம்
உலகம்செய்திசெய்திகள்

சுவிட்சர்லாந்தில் அதிவேக ஓட்டம் – இரு இளம் ஓட்டுநர்களின் உரிமம் பறிமுதல், குற்றவியல் விசாரணை ஆரம்பம்

பகிரவும்
பகிரவும்

சுவிட்சர்லாந்து – ஏப்ரல் 27, 2025: ஆர்காவ் கன்டோனல் போலீசார் தால்ஹெய்ம் மற்றும் ஸ்டாஃபெலெக் பாஸ் இடையிலுள்ள இரண்டாம் நிலை சாலையில் வேகக் கட்டுப்பாடு கண்காணிப்பை மேற்கொண்டனர். இங்கு மணிக்கு 80 கிமீ என்ற வேக வரம்பு விதிக்கப்பட்டிருந்த நிலையில், லேசர் கருவி மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு இளம் ஓட்டுநர்கள் கடுமையான அதிவேக ஓட்டத்தில் சிக்கியுள்ளனர்.

முதல் சம்பவத்தில், 18 வயதுடைய சுவிஸ் இளைஞர் ஒருவர் தனது BMW காரை 161 கிமீ வேகத்தில் ஓட்டிச் சென்றதைக் போலீசார் பதிவு செய்தனர். சட்டபூர்வமான வேகத்தை விட 76 கிமீ அதிகமாக வாகனம் ஓட்டியிருந்தமைக்காக, சம்பவ இடத்திலேயே அவரது தற்காலிக ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது 300 ஹார்ஸ் பவருக்கு மேற்பட்ட BMW காரும் போலீசார் ஆய்வுக்காக கைப்பற்றினர். இச்சம்பவம் தொடர்பில் அரசு வழக்கறிஞரின் வழிகாட்டலின் கீழ் குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதே நாளில், மற்றொரு சம்பவமாக, 23 வயதுடைய மோட்டார் சைக்கிள் பயிற்சியாளர் ஒருவர் தனது KAWASAKI வாகனத்தை 150 கிமீ வேகத்தில் ஓட்டிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இது, அங்குள்ள வேக வரம்பை 66 கிமீ அளவுக்கு மீறியதாகும். இதனால் அவரின் உரிமமும் இடத்திலேயே பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் சைக்கிளும் தற்காலிகமாக கைப்பற்றப்பட்டது, மேலும் அவருக்கும் எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தின் கடுமையான சாலை பாதுகாப்புச் சட்டங்களின்படி, இத்தகைய அதிவேக ஓட்டங்கள் பொதுமக்களின் உயிருக்கு நேரடி ஆபத்தை ஏற்படுத்துவதால், குற்றவியல் குற்றமாகவே கருதப்படுகின்றன. குறிப்பாக இளம் மற்றும் அனுபவமற்ற ஓட்டுநர்கள் தொடர்பான வழக்குகள் கடுமையாக எடுக்கப்படுகின்றன.

“பொறுப்பற்ற ஓட்டம் என்பது சாலைப் பயணிகள் அனைவரின் உயிருக்கும் ஆபத்தாக இருக்கக்கூடும். அதனைத் தடுக்கும் நோக்கில் போலீசார் தொடர்ந்தும் கண்காணிப்பை தீவிரமாக மேற்கொள்வார்கள்,” என ஆர்காவ் போலீசார் தெரிவித்தனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...