முகப்பு இலங்கை மே தின பேரணி அறிவிப்பு – அரசை கடுமையாக விமர்சித்த வடக்கின் தொழிற்சங்கங்கள்
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

மே தின பேரணி அறிவிப்பு – அரசை கடுமையாக விமர்சித்த வடக்கின் தொழிற்சங்கங்கள்

பகிரவும்
பகிரவும்

“காலாகாலமாக ஆட்சிக்கு வரும் அரசுகள் தொழிற்சங்கங்களைத் தமது தேவைக்கேற்ப பயன்படுத்திய பின் தூக்கி வீசிவிடுவது வழமை. அதேபோன்றே அநுர தலைமையிலான அரசும் கடந்த கால அரசுகள் போலவே எம்மைத் தமக்கான பொம்மைகளாகப் பயன்படுத்த முனைகின்றது.” – என்று வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அங்கு சம்மேளனத்தினர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் கடந்த 4 ஆண்டுகளாக மே தினத்தை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், இம்முறை நல்லூர் முன்றலில் இருந்து காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் பேரணி ஆரியகுளம் சந்தி வழியாகச் சென்று, ஸ்ரான்லி வீதி, யாழ். நகர் ஊடாக யாழ். மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்து, வை.எம்.சி.ஏ மண்டபத்தில் பேரணிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாம் இம்முறை 12 தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.” – என்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...