முகப்பு இலங்கை மே தின பேரணி அறிவிப்பு – அரசை கடுமையாக விமர்சித்த வடக்கின் தொழிற்சங்கங்கள்
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

மே தின பேரணி அறிவிப்பு – அரசை கடுமையாக விமர்சித்த வடக்கின் தொழிற்சங்கங்கள்

பகிரவும்
பகிரவும்

“காலாகாலமாக ஆட்சிக்கு வரும் அரசுகள் தொழிற்சங்கங்களைத் தமது தேவைக்கேற்ப பயன்படுத்திய பின் தூக்கி வீசிவிடுவது வழமை. அதேபோன்றே அநுர தலைமையிலான அரசும் கடந்த கால அரசுகள் போலவே எம்மைத் தமக்கான பொம்மைகளாகப் பயன்படுத்த முனைகின்றது.” – என்று வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அங்கு சம்மேளனத்தினர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் கடந்த 4 ஆண்டுகளாக மே தினத்தை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், இம்முறை நல்லூர் முன்றலில் இருந்து காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் பேரணி ஆரியகுளம் சந்தி வழியாகச் சென்று, ஸ்ரான்லி வீதி, யாழ். நகர் ஊடாக யாழ். மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்து, வை.எம்.சி.ஏ மண்டபத்தில் பேரணிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாம் இம்முறை 12 தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.” – என்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...