மாணவியின் தற்கொலைக்குப் பின்னர் ஏற்பட்ட போராட்டம் – டூப்ளிகேஷன் வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
கொழும்பு, மே 8: கொழும்பு கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவியொருவரின் தற்கொலைக்கு நீதி கோரி, பம்பலப்பிட்டியாவில் உள்ள ராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு எதிரே இன்று பாரிய போராட்டம் இடம் பெற்றது.
இதன் காரணமாக டூப்ளிகேஷன் வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்கொலை செய்துக்கொண்ட மாணவியை பாலியல் முறைகேடில் ஈடுபட்டு தூண்டிவிட்டதாகக் கூறப்படும் ஆசிரியரை உடனடியாக பணி நீக்கம் செய்து கைது செய்யக்கோரி போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரை பாதுகாத்ததாக கூறப்படும் பாடசாலை முதல்வருக்கும் எதிராகக் கடும் எதிர்ப்பு வெளிப்பட்டது.
இந்நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் தொடர்வதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து தேசிய அளவில் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.
கருத்தை பதிவிட