முகப்பு இலங்கை இன்றைய பேருந்து விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
இலங்கைசெய்திசெய்திகள்

இன்றைய பேருந்து விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

பகிரவும்
பகிரவும்

இன்று (மே 11) காலை நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில், ரம்போட பகுதியில் உள்ள கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியிலிருந்து விலகி பள்ளத்தாக்கிற்கு கீழே வீழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஐந்து ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்குவதாக ஆரம்ப கட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 25 பேர் மேல் நுவரெலியா மற்றும் கொத்மலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரையும் உறுதி செய்யப்படவில்லை.

இவ்விபத்துக்குள்ளான பேருந்து இலங்கை போக்குவரத்து சபையினைச் சேர்ந்ததாகவும், அது கதிர்காமம் முதல் குருநாகல் நோக்கி நுவரெலியா வழியாக பயணித்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...