முகப்பு இலங்கை இன்றைய பேருந்து விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
இலங்கைசெய்திசெய்திகள்

இன்றைய பேருந்து விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

பகிரவும்
பகிரவும்

இன்று (மே 11) காலை நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில், ரம்போட பகுதியில் உள்ள கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியிலிருந்து விலகி பள்ளத்தாக்கிற்கு கீழே வீழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஐந்து ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்குவதாக ஆரம்ப கட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 25 பேர் மேல் நுவரெலியா மற்றும் கொத்மலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரையும் உறுதி செய்யப்படவில்லை.

இவ்விபத்துக்குள்ளான பேருந்து இலங்கை போக்குவரத்து சபையினைச் சேர்ந்ததாகவும், அது கதிர்காமம் முதல் குருநாகல் நோக்கி நுவரெலியா வழியாக பயணித்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

திருமணம் ஆகி ஒரே மாத காலத்துக்குள் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்! காரணம் வெளியானது

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில், திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், உறவினரின் வீட்டில் திருமண விருந்தில்...

பிரபல நடிகை செமினி இடமல்கொடா கைது!

பிரபல நடிகை செமினி இடமல்கொட வெலிகடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடையான நிதி மோசடிகள் தொடர்பான...

பிள்ளைகளை அடிப்பதற்கு எதிரான சட்டமூலம் பெரும்பான்மையுடன் வெற்றி

ஜெனீவா – மே 10, 2025சுவிஸ் நாடாளுமன்றத்தில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடிப்பதை தடுக்கும் வகையில்...

பிரபல டீச்சர் அம்மா கைது – இளைஞனை தாக்கியதாக குற்றச்சாட்டு!

 நீர் கொழும்பு  – மே 10, 2025 5ஆம் தர மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வரும்,...