முகப்பு இலங்கை இன்றைய பேருந்து விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
இலங்கைசெய்திசெய்திகள்

இன்றைய பேருந்து விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

பகிரவும்
பகிரவும்

இன்று (மே 11) காலை நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில், ரம்போட பகுதியில் உள்ள கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியிலிருந்து விலகி பள்ளத்தாக்கிற்கு கீழே வீழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஐந்து ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்குவதாக ஆரம்ப கட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 25 பேர் மேல் நுவரெலியா மற்றும் கொத்மலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரையும் உறுதி செய்யப்படவில்லை.

இவ்விபத்துக்குள்ளான பேருந்து இலங்கை போக்குவரத்து சபையினைச் சேர்ந்ததாகவும், அது கதிர்காமம் முதல் குருநாகல் நோக்கி நுவரெலியா வழியாக பயணித்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இன்றைய ராசி பலன்கள்: இன்று: ஜூலை 6, 2025 – ஞாயிறு

அன்பான தமிழ்த்தீ வாசகர்களே இன்று  சந்திரன் சுயராசி கடகம்-இல் இருப்பதால் உணர்வுப் பேரோட்டம், குடும்ப பாசம்,...

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 5, 2025 (சனிக்கிழமை)!

இன்று சந்திரன் மகரத்தில் சஞ்சரிப்பதனாலும் சனி பகவானின் நாள் என்பதனாலும் பொதுவாக சீர்திருத்தம், பொறுப்பு, கடமை, சோதனை...

2026 ம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பு இடம்!

இன்று (04) முதல் அமைச்சர் டொக்டர் ஹரினி அமரசூரிய கம்பஹா தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் ஒன்றை...

யாழின் மையப்பகுதியில் வீதியின் நிலை!

யாழ் நகரின் முற்றவெளிக்கு  அருகே உள்ள பண்ணை வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பாரிய குன்றும்...