முகப்பு இலங்கை யாழ்ப்பாணத்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!
இலங்கைசெய்திசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணத்தில் விபத்து பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய அனிஸ்ரன் பலி

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் ஏற்பட்ட விபத்தில் கடுமையாக காயமடைந்த இளைஞர் ஒருவர், பல தினங்கள் சிகிச்சை பெற்றும் உயிர் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து கடந்த மே 11ஆம் திகதி இடம்பெற்றது. அனிஸ்ரன் மற்றும் அவரது நண்பர் ஒருவர் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில், முன்னோக்கி சென்ற வாகனத்தை முந்த முயன்ற போதையே, எதிரே இருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளனர்.

இந்த மோட்டார் வண்டி விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் குணமடைந்து வீடு திரும்பியதுடன், அனிஸ்ரன் பலத்த காயங்களுடன் தொடர்ந்தும் சிகிச்சையில் இருந்தார்.

அவரது நிலைமை கடந்த சில நாட்களாக மோசமாகிய நிலையில், நேற்று திங்கட்கிழமை (19) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய திடீர் மரண விசாரணைகளை நமசிவாயம் பிறேம்குமார் தலைமையிலான மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...