முகப்பு இலங்கை வடமாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றம்: அனுமதியின்றி நடவடிக்கை – ஆசிரியர் சங்கம் கண்டனம்!
இலங்கைகல்விசெய்திசெய்திகள்

வடமாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றம்: அனுமதியின்றி நடவடிக்கை – ஆசிரியர் சங்கம் கண்டனம்!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் – 27 மே 2025: வடமாகாண கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட 2024/2025ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றங்கள், உரிய அனுமதியின்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இடமாற்ற சபை உறுப்பினர் சோ. காண்டீபராசா தெரிவித்துள்ளார்.

2025 மே 26ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமாறு அறிவிக்கப்பட்ட இவ்விடமாற்ற நடவடிக்கைகள், இடமாற்ற சபையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், இது நடைமுறை தவறுகளுக்கிடையே பல்வேறு சர்ச்சைகளுக்கு தளமளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று (26.5.2025) ஊடகங்களுக்கான அறிக்கையொன்றை வெளியிட்ட காண்டீபராசா, ஆசிரியர்களின் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு இடமாற்றங்கள் சீராக்கப்படும் வரை, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கால அவகாசங்களை விதிப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கமும், இந்த இடமாற்ற நடவடிக்கைகள் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்து, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது.

“எமது முன்மொழிவுகள் பார்வையிடப்படாமலும், இடமாற்ற சபையின் ஆலோசனைக்குப் பிறகும் மேன்முறையீட்டு சபையின் பரிந்துரைமுமின்றி மேற்கொள்ளப்பட்ட இவ்விடமாற்றங்கள் முறையற்றதாகும்” என சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், 2025 மே 30க்குள் “சான்றிதழ் வழங்கக்கூடாது” என வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆசிரியர்களின் மேன்முறையீடுகளை ஏற்க மறுத்திருப்பது தொழில்சங்கங்களின் கண்டனத்துக்கு இடமளித்துள்ளது.

“வலயக் கல்வி அதிகாரிகளின் வக்கிர செயல்முறைகள் தொடருமானால், தொழிற்சங்க நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவையாக மாறும்” என இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது.

மூலம்: ஆசிரியர் சங்க ஊடகவியல் அறிக்கை, 26.5.2025

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

எருசலேமில் துப்பாக்கிச் சூடு : ஆறு பேர் பலி – 20 பேர் காயம்!

எருசலேமில் பரபரப்பான பேருந்து நிறுத்தம் ஒன்றில் திங்கட்கிழமை (08) காலை இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்...

‘ஐஸ்’ இரசாயன வழக்கில் புதுப்புது சான்றுகள் – மிட்தெனியாவில் காவல் உபகரணங்கள் மீட்பு!

மிட்தெனியாவில் புதைக்கப்பட்ட காவல் உபகரணங்கள் மீட்பு : ‘ஐஸ்’ இரசாயன வழக்குடன் தொடர்பு மிட்தெனியா தலாவ...

பாரிய பேருந்து விபத்து. மாநகர சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் உட்பட 15 பேர் பலி!

பதுளை, செப்டம்பர் 05: இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் சோகமான விபத்து,...

பாதாள உலகத் தலைவனின் மனைவி செப்டம்பர் 18 வரை சிறையில்!

கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் அசங்க எஸ். போதரகம, நேற்று (04) மிடெணியையைச் சேர்ந்த, பிரபல பாதாள...