தோ பாயோ, சிங்கப்பூர் – சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இந்திய வம்சாவளியைக் கொண்ட 70 வயது பெண்மணி சண்முகானந்தம் ஷியாமலா, வீதியில் புறாக்களுக்கு உணவு அளித்ததற்காக 1,200 சிங்கப்பூர் டாலர்கள் (இலங்கை ரூ. 2,80,000 ஐக் கடந்த தொகை) அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் அரசின் சட்டப்படி பொது இடங்களில் புறாக்களுக்கோ அல்லது வேறு வனவிலங்குகளுக்கோ உணவு அளிப்பது தடை செய்யப்பட்ட செயல் எனக் கருதப்படுகிறது. இச்சட்டம் புறாக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், அவற்றின் கழிவுகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளை தவிர்க்கவும் கொண்டு வரப்பட்டது.
சண்முகானந்தம் ஷியாமலா சிலமுறை அதிகாரிகளால் எச்சரிக்கப்படிருந்த போதிலும், மீண்டும் மீண்டும் புறாக்களுக்கு உணவு போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்மீது நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிங்கப்பூர் தேசிய பூங்கா வாரியம் (NParks) மற்றும் நகர அபிவிருத்தி துறை இணைந்து, புறாக்கள் அதிகமாக காணப்படும் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அங் மோ கியோ, பிஷான் மற்றும் தஞ்சோங் பகார் உள்ளிட்ட பகுதிகளில் ‘புறாக்களை கட்டுப்படுத்தும்’ சிறப்பு திட்டமும் 2024 இல் ஆரம்பிக்கப்பட்டது.
அத்துடன், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 400 இற்கும் மேற்பட்ட விதிமீறல் நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவை சுகாதாரக் காரணங்களை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூலம் – தந்தி
கருத்தை பதிவிட