முகப்பு இலங்கை வட மாகாணத்தில் USD 2.8 மில்லியன் புதிய வேலை வாய்ப்பு திட்டம்!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

வட மாகாணத்தில் USD 2.8 மில்லியன் புதிய வேலை வாய்ப்பு திட்டம்!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் | மே 29 – வட மாகாணத்தில் வாழும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வேலை வாய்ப்புகள், சமூக சுதந்திரம் மற்றும் காலநிலை நெகிழ்வுத் தன்மையை உருவாக்கும் நோக்குடன்,  2.8 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான GROW (Generating Resilient Opportunities for Work) எனும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) முன்னிலையில், அவுஸ்திரேலிய அரசினதும் நார்வே அரசினதும்  நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படுகின்றது.

வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், அவுஸ்திரேலிய தூதுவர் பால் ஸ்டீபன்ஸ் மற்றும் நார்வே தூதரகத்தின் பிரதிநிதி மார்டின் ஆம்டால் போத்தெயிம் ஆகியோர் இணைந்து திட்டத்தை சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் தொடங்கி வைத்தனர்.

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில், 75,000க்கும் மேற்பட்ட பெண் தலைமையிலான குடும்பங்கள், 21,000க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலரும் இன்னும் வாழ்வாதார சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், GROW திட்டம் நேரடியாக இந்தக் குழுக்களை இலக்காகக் கொண்டு செயல்பட உள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக

  • காலநிலை நெகிழ்வுத்தன்மை கொண்ட விவசாயம் மற்றும் நீர்வாழ் உயிரியல் வளர்ப்பு

  • சமூக உள்ளடக்கம் மற்றும் சக்திவாய்மை மேம்பாடு

  • சந்தை அமைப்புகளை வலுப்படுத்தல் மற்றும் தொழில் வாய்ப்புகள் உருவாக்கல் போன்றன உள்ளடங்குகின்றன.

இத்திட்டம், ILO-வின் கடந்த LEED, LEED+, EGLR மற்றும் PAVE போன்ற வேலை வாய்ப்பு திட்டங்களின் வெற்றியினை அடிப்படையாகக் கொண்டு, 2025 முதல் 2028 வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 இத்திட்டம் தொடர்பாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கூறுகையில் “அவுஸ்திரேலியா மற்றும் நார்வே அரசுகளின் ஒத்துழைப்புடன், நமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. GROW திட்டம் சமவாய்ப்பையும், காலநிலைத் திறனையும் முன்னிறுத்தும் முக்கிய முயற்சியாகும்.”

அவுஸ்திரேலிய தூதுவர் பால் ஸ்டீபன்ஸ் கருத்து கூறுகையில் “இலங்கையுடன் நாம் பேணும் அபிவிருத்தி கூட்டாண்மையை GROW திட்டம் மேலும் வலுப்படுத்தும். வடமாகாணத்தில் நாங்கள் இதற்கு முந்தைய பல திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்; தற்போது அவற்றின் நீட்சி இந்தத் திட்டமாகும்.” என்ன தெரிவித்திருந்தார்.

 அதேபோன்று நார்வே தூதரகத்தின் பிரதிநிதி மேலும் கூறுகையில் “GROW திட்டம் வடமாகாண மக்களின் வாழ்க்கையில் நேரடி மாற்றங்களை ஏற்படுத்தும் திறனுடையது என நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்

நிதி விபரம்:

  • அவுஸ்திரேலிய அரசால் வழங்கப்படும் தொகைUSD 1.9 மில்லியன்

  • நார்வே அரசின் பங்களிப்புUSD 900,000

இந்தத் திட்டம், வட மாகாண மக்களின் நீண்டகால வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வாக மட்டுமல்லாது, அவர்களின் அதிகாரமயமாக்கலுக்கும், சமூக நீதிக்கும் ஒரு புதிய ஆரம்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...