முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவிகள் இருவர் குமுழமுனை பிரதேசத்தில் உள்ள கொட்டுக் கிணத்து பிள்ளையார் கோயில் கேணியிலே தவறி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோருடன் அப்பகுதியிலே ஞாயிறு விடுமுறை நாளை கழிப்பதற்காக சென்ற நிலையிலேயே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது பிள்ளைகள் கேணியில் விளையாடிக் கொண்டிருந்த தருணம் தவறுதலாக விழுந்து இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு சம்பவம் ஏற்பட்டபோது அருகிலே யாரும் இல்லாத நிலையில் பிள்ளைகள் மரணம் அடைந்த நிலையிலே ஊர் மக்களும் பாடசாலை சமூகத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. றஸ்மிலா மற்றும் கிருசிகா என்ற குறிப்பிட்ட இரண்டு மாணவிகளும் கல்வியில் சிறப்பாக செயற்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்தை பதிவிட