ஹைதராபாத், இந்தியா – மே 31, 2025
72வது உலக அழகி போட்டி, இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி (Opal Suchata Chuangsri) உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தாய்லாந்துக்காக உலக அழகி பட்டத்தை வென்றுள்ள முதலாவது சாதனையாகும்.
📋 இறுதி நிலை பெறுபேறுகள்:
-
👑 உலக அழகி 2025: ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி (தாய்லாந்து)
-
🥈 முதல் ரன்னர்-அப்: ஹஸ்ஸெட் டெரெஜே அட்மாசு (எத்தியோப்பியா)
-
🥉 இரண்டாம் ரன்னர்-அப்: மாஜா கிளாஜ்டா (போலந்து)
-
🎖️ மூன்றாம் ரன்னர்-அப்: ஔரேலி ஜோசிம் (மார்டினிக்)
இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய நந்தினி குப்தா, இறுதி 20 அழகிகளுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், பாராட்டுதலுக்கு இடமாகின்றார்.
👩🎓 ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி பற்றி சில தகவல்கள்:
-
பிறந்த இடம்: பூக்கெட், தாய்லாந்து
-
பிறந்த தேதி: 20 செப்டெம்பர் 2003
-
உயரம்: 1.80 மீட்டர்
-
கல்வி: தமஸாட் பல்கலைக்கழகம்
-
முன்னாள் பட்டம்: Miss Universe Thailand 2024
-
Miss Universe 2024 இல் மூன்றாம் ரன்னர்-அப்
இந்த நிகழ்வின் தொகுப்பாளர்களாக ஸ்டெபானி டெல் வாலே (Miss World 2016) மற்றும் இந்தியாவின் சச்சின் கும்பார் ஆகியோர் செயற்பட்டிருந்தனர். நிகழ்வை மேலும் சிறப்பிக்க, பாலிவுட் நட்சத்திரங்கள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் இஷான் கட்டர் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
கருத்தை பதிவிட