எதிர்வரும் வைகாசி விசாகம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சிறப்பு பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று 02.06.2025 முல்லைத்தீவு சிலாவத்தை தீர்த்தக்கரை கடற்கரையில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இனிதே நிறைவேறி தீத்தமானது பல பக்தர்கள் புடை சூழ தீர்த்தக் குழுவினரால் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் நோக்கி கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கின்றது.
தீர்த்தம் எடுக்கப்பட்ட உப்பு நீரில் விளக்கெரியும் அதிசய சங்கல்பத்தை வைகாசி விசாக தினத்தன்று அதிகாலை வரை காட்ட விநாயகர் ஆலயத்தில் கண்கொள்ளாக் காட்சியாக கண்டு களிக்கலாம்
அதனைத் தொடர்ந்து தீர்த்தம் மற்றும் மடை என்பன வைகாசி விசாக அதிகாலை வேளையில் அதிசயங்கள் பல நிறைந்த பத்தாம் பளை என அழைக்கப்படும் வாற்றப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சமய பாரம்பரிய முறைகளுக்கு ஏற்ப விசாக விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த தீர்த்தமெடுக்கும் அற்புதமான நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தம் எடுக்கும் அற்புதக் காட்சியை கண்டு களித்து நடைபவணியாக தற்போது முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயம் நோக்கி சென்று கொண்டிருக்கும் அற்புதக் காட்சியை காணக் கூடியதாக உள்ளது.
கருத்தை பதிவிட