முகப்பு இலங்கை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுக்கும் வைபவம் இன்று!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுக்கும் வைபவம் இன்று!

பகிரவும்
பகிரவும்

எதிர்வரும் வைகாசி விசாகம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சிறப்பு பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று 02.06.2025 முல்லைத்தீவு சிலாவத்தை தீர்த்தக்கரை கடற்கரையில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இனிதே நிறைவேறி தீத்தமானது பல பக்தர்கள் புடை சூழ தீர்த்தக் குழுவினரால் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் நோக்கி கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கின்றது.

தீர்த்தம் எடுக்கப்பட்ட உப்பு நீரில் விளக்கெரியும் அதிசய சங்கல்பத்தை வைகாசி விசாக தினத்தன்று அதிகாலை வரை காட்ட விநாயகர் ஆலயத்தில் கண்கொள்ளாக் காட்சியாக கண்டு களிக்கலாம்

அதனைத் தொடர்ந்து தீர்த்தம் மற்றும் மடை என்பன வைகாசி விசாக அதிகாலை வேளையில் அதிசயங்கள் பல நிறைந்த பத்தாம் பளை என அழைக்கப்படும் வாற்றப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சமய பாரம்பரிய முறைகளுக்கு ஏற்ப விசாக விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த தீர்த்தமெடுக்கும் அற்புதமான நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தம் எடுக்கும் அற்புதக் காட்சியை கண்டு களித்து நடைபவணியாக தற்போது முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயம் நோக்கி சென்று கொண்டிருக்கும் அற்புதக் காட்சியை காணக் கூடியதாக உள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...