வவுனியாவிலே பாடசாலை ஆசிரியை ஒருவருடைய தலையை அவரது கணவன் வெட்டிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது ரஜூட் சுவர்ணலதா என்ற 32 வயதுடைய ஆசிரியையின் தலையை அவரது கணவனே வெட்டி எடுத்துக்கொண்டு தலையையும் ஒரு பையில் எடுத்துக்கொண்டு புளியங்குளம் போலீசில் சரணடைந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.
குறித்த ஆசிரியையின் உடலமானது நைனா மடு காட்டுப்பகுதியில் வீசி உள்ளதாக கணவன் குறிப்பிட்டதை அடுத்து அந்தப் பகுதியில் போலீசார் தலையற்ற உடலை தேடும் பணியிலே ஈடுபட்டு இருக்கிறார்கள்.
குடும்பத் தகராறு காரணமாக இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது சமாதானம் பேசுவதாக கூறி மனைவியை அழைத்துச் சென்றே கணவன் இவ்வாறான ஒரு செயற்பாட்டை செய்ததாக கூறப்படுகின்றது.
கருத்தை பதிவிட