புகேட், தாய்லாந்து: தாய்லாந்தின் புகேட்டில் இருந்து இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI 379) இன்று வெள்ளிக்கிழமை குண்டுவெடிப்பு மிரட்டலை எதிர்கொண்டது. அதன் காரணமாக அவசரமாக விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது என்று தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் இருந்த 156 பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவசர நிலை செயல்திட்டத்தின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக “Airports of Thailand (AOT)” அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விமானம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 8.00) புகேட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு டெல்லிக்குச் செல்ல இருந்தது. ஆனால் அது அண்டமான் கடலில் ஒரு பெரிய வட்டத்தில் பறந்து மீண்டும் புகேட் தீவில் அவசரமாக தரையிறங்கியது. இந்த விவரங்களை Flightradar24 என்ற விமான கண்காணிப்பு சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம், ஒரு நாள் முன்னே அஹ்மதாபாத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தின் பின்னணியில் நிகழ்வது குறிப்பிடத்தக்கது. அந்த விபத்தில் 240-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு மிரட்டல் குறித்து AOT விரிவான தகவல்களை வெளியிடவில்லை. ஏர் இந்தியாவும் இதுதொடர்பாக உடனடி பதிலை அளிக்கவில்லை.
முந்தைய வருடங்களில் போலியான குண்டு மிரட்டல்கள் இந்திய விமான நிலையங்களுக்கும் ஏர்லைன்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளன. 2023 ஆம் ஆண்டு முதல் 10 மாதங்களில் மட்டும் சுமார் 1,000 போலி குண்டு மிரட்டல்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்தை பதிவிட