தூக்கத்தின் நேரத்தைப் பொறுத்து நம்முடைய மனநலம் மிகுந்த அளவில் பாதிக்கப்படும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, தாமதமாக இரவில் தூங்குபவர்கள், பரிதாபமாக தூக்கமின்மையால் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, தூக்கத்திற்கு இன்றியமையாத மெலடோனின் ஹார்மோன் சுரப்பும் குறைவடைகிறது.
இந்த தகவலை மும்பையின் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் உளவியலாளர் டாக்டர் ஷௌனக் அஜிங்க்யா இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கு வழங்கியுள்ளார்.
“எனது நோயாளிகளில் பலர் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறார்கள். இதனால், அவர்களது மனநலப் பிரச்சினைகள் கடுமையாகி வருகிறது,” என அவர் கூறியுள்ளார்.
மனித உடல் இயங்கும் சர்க்காடியன் ரிதம், ஒரு இயற்கையான 24 மணி நேர சுழற்சி. இது நம் தூக்க நேரம், ஹார்மோன் சுரப்பு மற்றும் உடல் வெப்பநிலையை சீராக்கும் முக்கிய இயந்திரம்.
ஆனால், நள்ளிரவுக்குப் பிறகு தூங்கும் பழக்கம், இந்த இயற்கை சக்கரத்தை முற்றிலும் கலைத்துவிடுகிறது. இதனால், தூக்கத்தின் தரமும் குறைகிறது.
மேலும், இரவில் விழித்திருப்பது, தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியைத் தடுக்கும். இது, நம்மை தூங்க வைக்கும் உடல் அமைப்பையே பாதிக்கின்றது.
தூக்கமின்மை, மன அழுத்தம், கவலை, உணர்வு ஏறத்தாழ்வுகள் என மூச்சுத்திணறும் மனநிலைக்கே வழிவகுக்கின்றது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கருத்தை பதிவிட