முல்லைத்தீவு – ஜூன் 16:
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாஞ்சோலை பகுதியில் உள்ள பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று (16) காலை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பல கடைகள் தீக்கிரையாகியுள்ள நிலையில், தீயின் பரவல் தொடர்ந்தும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் முக்கிய அம்சமாக பார்க்கப்படும் விஷயம், பலத்த காற்று வீசும் சூழ்நிலை. அதனால்தான் தீப் பரவல் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. தீச் சுவாலைகள் பல மடங்கு தாண்டி காற்றில் பறந்து செல்லும் விதத்தில் பரவல் நடக்கின்றது.
மக்கள் உயிர் மற்றும் சொத்துப் பாதுகாப்பிற்காக மிக மிக அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தீயணைப்பு துறையின் பிரிவு முல்லைத்தீவில் இல்லாததால், இவ்விசேட சூழ்நிலையில் இராணுவத்தின் உடனடி உதவி நாடப்பட்டுள்ளது. தற்போது, படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை வெளிச்சத்திற்கு வரவில்லை என்றும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கருத்தை பதிவிட