மனித உரிமைகள் மீது அரசின் புறக்கணிப்பு தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று (20) காலை 10 மணிக்கு வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்த ஒருங்கிணைப்பு குழுவினர் முக்கிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு காரணமாக பொலிசாரும் குவிக்கப்பட்டனர்.
“ புனிதமாக புதைக்கப்படவேண்டிய எங்கள் மரணமடைந்தவர்களின் எச்சங்கள் இதுவரை நீதிக்காக காத்திருக்கின்றன. நீதிக்கான குரலை நாங்கள் கைவிட மாட்டோம்” எனஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர் .
செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியின் நீதி இன்னும் தீரப்படாததால், இதற்கான விசாரணைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.
இது ஒரு தனி சம்பவமல்ல, தேசிய அளவிலான மனித உரிமைப் போராட்டங்களும் இணைந்து செல்கின்ற சோதனையின் ஓர் பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் ஒருங்கிணைப்பாளர்கள்.
பங்கேற்பாளர்களில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், சமூக அமைப்புகள், மற்றும் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்தனர்.
கருத்தை பதிவிட