2025 ஜனவரி மாதம் வாகன இறக்குமதி மீண்டும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 73,400 க்கும் மேற்பட்ட வாகனங்கள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
இவற்றில் பெரும்பான்மையானவை இருசக்கர வாகனங்கள் என்பதுடன்,
🔹 58,947 இருசக்கர வாகனங்கள்
🔹 7,500 கார்கள்
🔹 1,666 முச்சக்கர வண்டிகள்
என்ற வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்ச வாகனப் பதிவுகள் இறுதி மாதத்தில் பதிவாகியுள்ளன என அவர் கூறினார். இது, இறக்குமதி தடை நீக்கம் வாகன சந்தையில் உள்ள ஆவலையும், தேவை அதிகரிப்பையும் பிரதிபலிக்கின்றது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவிக்கையில்,
2025 ஏப்ரல் 28ஆம் தேதியிலிருந்து புதிய வாகன இலக்கப்பலகைகள் வினியோகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கப்பலகை அச்சிடும் உபகரணங்களில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சிக்கல் இன்னும் இரண்டு மாதங்கள் நீடிக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், தற்போதைய பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு 2025 ஆகஸ்ட் மாதம் வரை அதிகாரப்பூர்வ இலக்கங்களை வழங்க இயலாத நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தீ கருத்து:
இறக்குமதி தடை நீக்கம் வாகன சந்தையை உயிரோட்டமளித்தாலும், நிர்வாக சிக்கல்கள் காரணமாக மக்களுக்கு ஏற்படும் இக்கட்டான நிலைகள் விரைவில் தீரவைக்கப்பட வேண்டும். புதிய வாகனத் தயார் வாங்கியவர்களுக்கு இலக்கப்பலகை இல்லாமல் சாலையில் பயணம் செய்வது சட்டபூர்வமா? என்பது ஒரு புதிய கேள்விக்குறியாகவே உள்ளது.
கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...
மூலம்AdminOctober 16, 2025இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...
மூலம்AdminOctober 16, 2025கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...
மூலம்AdminOctober 16, 2025Excepteur sint occaecat cupidatat non proident
கருத்தை பதிவிட