முகப்பு அரசியல் ஈரானில் அமெரிக்கா தாக்குதல்; இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரம் – நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு!
அரசியல்உலகம்செய்திசெய்திகள்

ஈரானில் அமெரிக்கா தாக்குதல்; இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரம் – நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு!

பகிரவும்
பகிரவும்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடாஞ்சு மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய அணுசக்தி தளங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்க படைகள் “மிகவும் வெற்றிகரமான” தாக்குதல்களை நடத்தியுள்ளன என்றும், தற்போது அனைத்து அமெரிக்க விமானங்களும் ஈரானிய வான்வெளியிலிருந்து வெளியேறியுள்ளன என்றும் தெரிவித்தார்.

இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இஸ்ரேல் படைகள் தற்போது ஈரானின் இராணுவத் தளங்கள் மற்றும் அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்கிவருகின்றன. இதற்கு முன்னதாக, ஈரான் இஸ்ரேலை நோக்கி பல ட்ரோன்களை ஏவியது.

இவ்விடையே, டிரம்ப் அவரது தேசிய உளவுத்துறை இயக்குநராக உள்ள டல்சி கேபார்டை வெளிப்படையாக கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரான் அணுகுண்டு தயாரிக்கவில்லை என்ற அவரது கூற்று தவறானது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, 400க்கும் மேற்பட்ட மக்கள் ஈரானில் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் குறைந்தது 3,056 பேர் காயமடைந்துள்ளனர் என ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் ஈரானின் தாக்குதல்களில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...