முகப்பு இலங்கை யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடுகதி புகையிரத சேவை தினசரி சேவையாக மாற்றம்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடுகதி புகையிரத சேவை தினசரி சேவையாக மாற்றம்!

பகிரவும்
பகிரவும்

இதுவரை வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) மாத்திரம் இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவை, எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதியிலிருந்து தினசரி சேவையாக செயல்படுத்தப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலையத்தின் அத்தியட்சகர் ரீ. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (26) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், பொதுமக்களினதும் புகையிரத திணைக்களத்தினதும் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதிய கால அட்டவணை இவ்வாறு உள்ளது:

  • கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து காலை 5.15 மணிக்கு கடுகதி புகையிரதம் புறப்படும்.

  • கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு,

  • மதியம் 11.49 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடையும்.

  • பின்னர், மதியம் 12.13 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையும்.

திரும்பும் பயணம்:

  • மாலை 1.50 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும்.

  • மாலை 2.12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு,

  • இரவு 8.33 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை,

  • மற்றும் இரவு 8.55 மணிக்கு கல்கிசை புகையிரத நிலையத்தை சென்றடையும்.

மேலும், இந்த சேவைக்கான ஆசன முன்பதிவுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, புகையிரத திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஊடாக முன்பதிவுகளை மேற்கொள்ளலாம் எனவும் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இதுவரை கொழும்பிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு வந்த யாழ் தேவி புகையிரதம், ஜூலை 7ஆம் திகதியிலிருந்து காலை 6.35 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

மன்னார் வடக்கில் இந்திய மீன்பிடி படகு பறிமுதல் – 8 இந்திய மீனவர்கள் கைது.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, இலங்கை கடற்படை, மன்னார் வட பகுதியிலுள்ள இலங்கை...

காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதலில் 81 பேர் உயிரிழப்பு – பொதுமக்கள் இலக்காக?

காசா மண்டலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேலின் விமான தாக்குதல்களில் குறைந்தது 81 பஸ்தினியர்கள் உயிரிழந்துள்ளனர்...

அமெரிக்காவுக்கும் G7 நாடுகளுக்கும் இடையே சர்வதேச வரி ஒப்பந்தம் – பிரிவு 899 நீக்கம்

அமெரிக்கா மற்றும் ஏழு தொழில்துறை முன்னேற்ற நாடுகளை உள்ளடக்கிய G7 நாடுகள், அமெரிக்க நிறுவனங்களுக்கு தற்போதைய...

டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை – “ஈரான் மீதான தாக்குதல் உறுதி!”

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் குறிப்பிடத்தக்க அளவில் யூரேனியம் செறிவூட்டுவதாக அமெரிக்க புலனாய்வுத் தரவுகள்...