முகப்பு இலங்கை யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடுகதி புகையிரத சேவை தினசரி சேவையாக மாற்றம்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடுகதி புகையிரத சேவை தினசரி சேவையாக மாற்றம்!

பகிரவும்
பகிரவும்

இதுவரை வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) மாத்திரம் இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவை, எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதியிலிருந்து தினசரி சேவையாக செயல்படுத்தப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலையத்தின் அத்தியட்சகர் ரீ. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (26) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், பொதுமக்களினதும் புகையிரத திணைக்களத்தினதும் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதிய கால அட்டவணை இவ்வாறு உள்ளது:

  • கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து காலை 5.15 மணிக்கு கடுகதி புகையிரதம் புறப்படும்.

  • கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு,

  • மதியம் 11.49 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடையும்.

  • பின்னர், மதியம் 12.13 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையும்.

திரும்பும் பயணம்:

  • மாலை 1.50 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும்.

  • மாலை 2.12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு,

  • இரவு 8.33 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை,

  • மற்றும் இரவு 8.55 மணிக்கு கல்கிசை புகையிரத நிலையத்தை சென்றடையும்.

மேலும், இந்த சேவைக்கான ஆசன முன்பதிவுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, புகையிரத திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஊடாக முன்பதிவுகளை மேற்கொள்ளலாம் எனவும் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இதுவரை கொழும்பிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு வந்த யாழ் தேவி புகையிரதம், ஜூலை 7ஆம் திகதியிலிருந்து காலை 6.35 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...