முகப்பு இலங்கை இலங்கை காவல்துறையில் 28,000 பணியிடங்கள் காலி – விரைவில் 5,000 பேர் நியமிக்க நடவடிக்கை
இலங்கைசெய்திசெய்திகள்

இலங்கை காவல்துறையில் 28,000 பணியிடங்கள் காலி – விரைவில் 5,000 பேர் நியமிக்க நடவடிக்கை

பகிரவும்
பகிரவும்

கொழும்பு | ஜூலை 8, 2025:
தற்போது இலங்கை காவல்துறையில் 28,000க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன என பொதுச் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இக்காலிப்பணியிடங்களில் முதற்கட்டமாக 5,000 பணியிடங்களுக்கு உடனடி நியமனம் மேற்கொள்வதற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளதுடன் அதற்கான  அறிவிப்பு (Gazette Notification) தற்போது வெளியிடப்பட்டுள்ளதுமாகும் என தெரிவித்தார்.

உப காவல் பரிசோதகர் (Sub Inspector) மற்றும் காவல் கான்ஸ்டபிள் (Police Constable) பதவிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கீழ்தர காவல் அதிகாரிகளுள் 5,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதகர் நிலை அதிகாரிகள் 1,500 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம், காவல்துறையின் ஆட்சித் திறனை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...